Thursday, August 8, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


முரண்டு பிடிக்கும் பெண்களையும்,மிரண்டு நிற்கும் பெண்களையும் 

சமாளிப்பது சுலபம்..கண்களில் நீருடன் மருண்டு நிற்கும் 

பெண்களை சமாளிப்பதே கடினம்..
 
எத்தனை கவனமாய் இருப்பினும் காதல் கொண்ட மனதும்,

கள்ளம் செய்த மனதும் கண்களில் தெரிந்து விடுகிறது..

 

சம்சாரியா ஆகப்போறேன்னு சொன்னா பசங்க 

பயப்படுறாங்க..சாமியாரா ஆகப்போறேன்னு சொன்னா 

பொண்ணுங்க பயப்படுறாங்க..

 


ஆண்களால் காயப்பட்ட பெண்களைக் காட்டிலும்,

பெண்களால் காயப்பட்ட ஆண்களை தேற்றுவதே மிகக் கடினம்..
 


ஆனந்தத்தில் வரும் கண்ணீர் அற்புதமானது..

விரக்தியில் தோன்றும் சிரிப்பு வேதனையானது..
 

வார்த்தைகளில் வசமாக்க முடியாத கவிதைகளில் ஒன்று , 

குழந்தைகளின் முத்தம்..

 


அவள் மேல் உள்ள சந்தேகத்தில் குடிப்பவனை விட , 

தன் பலகீனங்களைக் கண்டு பயந்து குடிப்பவனே அதிகம்..
 


தன்னுடல் பற்றி அறிந்ததை விடவும் பெண்ணுடல் பற்றி 

அறிந்தவன் பிரகாசிக்கிறான் படுக்கையில்..ஹ்ம்ம்..

No comments: