Thursday, November 14, 2013

என் வாழ்க்கை நீ

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

காதல் வழியும் உன் கண்களின் வெளிச்சம் பட்டு என் 

தேகமெல்லாம் நிறம் மாற , என்னை சூழ்ந்திருந்த கவலை 

மேகங்களும் நிறம் மாறுகின்றன..


காலம் முழுதும் நீ சேர்த்து வைத்த காதலை , என்னைப் பார்த்த 

அந்த நொடியில் உன் கண்களின் வழியே கண்டேன்..

 
எனக்காக காத்திருக்கையில் வெட்கம் பூசிய வெள்ளைத் 

தாமரையாய் உன் முகம்,ஆனால் தவிப்புடன் அலைபாயும் 

கண்கள் ..# ராட்சசி..லவ்யூடி..


 
உன் காதல் இன்றி இத்தனை நாள் எப்படி வாழ்ந்தேன் 

என தெரியாது.. ஆனால் இனி நீ மட்டுமே என் 

வாழ்க்கை என தெரியும் ..


அத்தனை உறுப்புகளின் வலியும் கண்களில் தெரிவது 

போல என் அத்தனை உறவுகளும் உன் காதலில் தெரிகிறது...


எத்தனையோ அழகிகள் கண்டபோதிலும் , உன்னைப்போல் 

ஒருத்தி இருப்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்னால்..

# தேவதை ஸ்த்ரீயடி நீ..






உன் அழகைக் கண்டு அச்சப்பட்டு விலகுகிறேன் நான்..

கண்களில் காதலைக் காட்டி காந்தம் போல் ஈர்க்கிறாய் நீ..



நம் நலன் குறித்து செய்வன அனைத்தையும் உன்னை 

ஆலோசித்தே செய்கிறேன்..என் நலன் குறித்து 

மட்டும் நீயே முடிவெடுப்பது ஏன் ஹனி..?





எனக்கு வலிகளைத் தர, நீ பேசும் வார்த்தைகளின் 


தொனியை மாற்றினாலே போதும்..

# துடிக்க வைக்காதே ஹனி.. ப்ளீஸ்..




எத்தனை முறை என்னை உயிர்ப்பிக்கிறாயோ, அத்தனை 


முறை என்னை மரிக்கவும் செய்கிறாயே ஏனடி..? 

# ஹனி பெயர்ச்சி..

No comments: