Sunday, September 2, 2012

நீ சூழ் உலகு..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



என் சில்மிஷங்களினால் உன்னை சிரிக்க வைக்கிறேன்..

நீ சிரித்து என்னை சிலிர்க்க வைக்கிறாய்..




உன் காதலைப் பெற முடியாமல் நான் சற்று தடுமாறுவேனே

தவிர..இன்னொருத்தி பின்னால் தடம் மாற மாட்டேன்..




எந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தாலும்
உன் பெயரையே முதலில் எழுதுகிறேன்..

முதலும்,முடிவும் நீயே.





காமத்தின் வெளிப்பாடாய் என் முத்தம்..

காதலின் வெளிப்பாடாய் உன் முத்தம்..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..




இது நீர் சூழ் உலகாம்..எனக்கு மட்டும் நீ சூழ் உலகு..



 


என் சீண்டல்களில் சிலிர்த்து,சிணுங்கிக்கொண்டே  கைகள் 

கொண்டு முகம் மூடுகிறாய்..வெட்கத்துக்கே 

வெட்கம் வருகிறதாம்..#வெட்கப்பட்டுக்கிட்டே 

இருந்தா வெளங்கிடும்..




எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதது குறித்து கோபிக்கிறாய்..

உன்னை என்னுடன் சேர்த்த காதல் நம்பிக்கை மட்டுமே 

உண்டு எனக்கு ஹனி..



 


மகிழ்ச்சியின் மிகுதியில் செத்துவிடலாம் என்கிறாய்..

பைத்தியக்காரி..புதிதாய் பிறப்போம் வாடி..


 


பல வார்த்தைகள் கொண்டு காதலை வெளிப்படுத்துகிறேன் நான்..

நீயோ ஒற்றை முத்தத்தில் புரியவைத்து விடுகிறாய்..


 


விடைபெற எத்தனிக்கையில் திரண்ட உன் கண்ணீர் 

துளிகளில் கரைகிறேன் " நான் "

No comments: