Tuesday, September 25, 2012

தேவதை

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



முத்தத்திலேயே நன்றி சொல்லவும்,மன்னிப்பு கேட்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..லவ்யூடி ஹனி…



மகிழ்ச்சியை மட்டும் நம்முடையது என என்னும் நீ,


 வருத்தங்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்வது ஏனோ..?



என்னை எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் செயலிழக்க 


செய்வது உன் சிரிப்பும்,அழுகையும்..



என் மகிழ்ச்சிக்காக உன் வலியை மறைத்து சிரிக்கிறாய்.. 


நீ என்னுள் கலந்தவள் என்பதை மறந்து..பைத்தியக்காரி..



காரணம் தெரிந்த உன் கோபம் தரும் வலியை விட..

ஏதும் சொல்லா மவுனம் என்னைக் கொல்லுதடி..

# ஹனி பெயர்ச்சி..



உன்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் 

விடியலே வேண்டாம் என என்னும் நான், பேசி 

முடித்தவுடன் விடியலுக்காக காத்திருக்க தொடங்குகிறேன்.. 

உன் முகம் காண…



யாருக்கும் அடங்காமல் திமிராய் திரிந்தேன்..


அன்பால் அடக்கி , காதலால் கட்டுப்படுத்தி விட்டாய்..



நான் உன்னை அடித்த சோகத்தில் அழுகிறாய் நீ.. 

உன்னை அடித்ததால் என் மேல் உண்டான கோபத்தில் 

அழுகிறேன் நான்..



நான் காதல் கொண்டு தொடுவதற்கும்,மோகம் கொண்டு 

தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து அதற்கேற்ப 

முத்தங்கள் அளிக்கிறாய்..தேவதை ஸ்த்ரீயடி நீ..



உனக்காக என் விருப்பங்களை "மாற்றிக்கொள்ள 

முயற்சிக்கிறேன்' நான்.. எனக்காக "அப்படியே 

ஏற்றுக்கொள்கிறாய்" நீ..தேவதை ஸ்த்ரீயடி நீ..

No comments: