Sunday, September 30, 2012

ஒற்றை முத்தம்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



"உன் மனதிற்கு" விருப்பம் போல 

செயல்படு என்கிறேன்.."ஹ்ம்ம்..சொல்லுடா , 

என்ன பண்ணனும்" என்கிறாய்..லவ்யூடி ஹனி…



பிரிவின் வலியை பிரயத்தனப்பட்டு , பல வார்த்தைகளில் 

உனக்கு சொல்கிறேன் நான்..அதையே எளிதாக , 

ஒரு பார்வையிலும்,அணைப்பிலும் எனக்கு 

உணர்த்திவிடுகிறாய் நீ..


மோகத்தின் மிகுதியில் நான் தரும் அத்தனை 

முத்தங்களையும் அற்பமாக்கி விடுகிறது.. காதலுடன் 

நீ கொடுக்கும் ஒற்றை முத்தம்..



நீ இருக்கும் இடத்தில் நீ மட்டுமே சிறப்பு..



நமக்கிடையேயான இடைவெளியை முத்தத்தால் 


நிரப்புகிறேன் நான்..மவுனத்தால் நிரப்புகிறாய் நீ..



முரண்டு பிடிக்கும் உன்னை அடக்கும் 


அங்குசமாய் என் முத்தம்..



அடிக்கடி சந்திக்காமல் இருப்பது உன்னை 


தவிர்ப்பதற்காக அல்ல..என்னைப்பிரிகையில் நீ 

தவிப்பதைக் காண முடியாததால் தான்..



உன் பெயரில் உள்ளே ஒரே காரணத்தினால் 

வல்லினங்களும் மெல்லினங்களாக மாறி விடுகின்றன..



சனியின் பார்வை உக்கிரமாக இருக்கிறதாம் 


என் ஜாதகத்தில்..ஹனி..காதல் வழியும் கண்களுடன் 

என்னை ஒரு முறை பாரேன்..சாதகமாக மாறிவிடும்..



உன்னுடன் சண்டையிட முயற்சித்து.. உடனே கலங்கும் 


உன்னை சமாதானப்படுத்துவதில் முடிக்கிறேன்…

ஒவ்வொரு முறையும்...

No comments: