Friday, September 28, 2012

ஏன் இப்படி ...68

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



பல நேரங்களில் ஹோட்டல்களில் சர்வர்களின் 


விருப்பமே நம்ம விருப்பமா மாற்றப்படுது..

# என்ன எழவுடா இது..



போன்ல சத்தமா பேசுற ரூம் மேட்டைக் கூட சமாளிச்சுடலாம்..


ஆனா முத்தமா கொடுத்து இம்சிக்கிறவனைக் கொல்லணும் 

போல இருக்கு..#நொச்சு நொச்சுன்னு..முடியலைடா டேய்..



முத்தம் கொடுப்பதும்,வாங்குவதும் சுகம் தான்..


ஆனா வெறுமனே அவங்க வாயை வேடிக்கை 

பார்க்கிறது நரக வேதனைடா சாமி..




காதலிக்கிறவனுக்கு கற்கண்டா இனிக்கும் முத்தம்,


வேடிக்கை பார்க்கிறவனுக்கு வேப்பங்காயா கசக்குது…

#கடுப்பேத்தாதீங்கடா கருமம் பிடிச்சவனுங்களா…



அடுத்தவனைக் கெடுக்காம , நான் மட்டும் தானேடா 


கெட்டுப்போறேன்..அப்புறம் ஏன் கெட்டவன் 

கெட்டவன் கூவுறீங்க..#ஐயோ ராமா...




கல்யாணப்பத்திரிக்கையை நேர்ல கொடுத்தா போதாதாம்..


FB ல போடணுமாம்.. அட பதருகளா..



FEB 14 அன்னைக்கு வாழ்த்தாம  , நண்பர்கள் தினம் அன்னைக்கு 

வாழ்த்தும் பொண்ணுங்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா...?

#என்னாது நான் ப்ரெண்டா..மீ பாவம்..*



*ஜெனிலியா போல பண்றேன்னு சில பொண்ணுங்க சீன் 


போடுறது அவங்களை முழு லூசா காட்டுது..

ஜெனிலியா பேஸிக்காவே அரை லூசுன்றதால கொஞ்சம் 

அழகா இருக்கு..புரிஞ்சுக்குங்க பொண்ணுங்களா..*



 எனக்கு தெரியாதுன்னு சொல்லாம ஏதோ 

ஒண்ணை சொல்லிக்கேட்குறவனை குழப்புவதையே 

பல பேரு செய்யுறானுங்க… ஏன்டா ஏன்… 



அவன் அவன் கஷ்டமே ஆயிரம் இருக்கும்போது அடுத்தவன் 

செய்யுற வேலையில நொட்டை சொல்றவங்களே.. ஏன்டா ஏன்…? 

No comments: