Wednesday, July 25, 2012

ஏன் இப்படி ...66

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






பாஸுக்கும்,காதலிக்கும் உள்
ஒற்றுமை..

நாம எவ்வளவு நேரம் அவங்க கூட இருந்தாலும் பத்தாது..

வேடிக்கைப் பார்த்துகிட்டு  வெட்டி நியாயம்

பேசிக்கிட்டே இருக்கணும்..



 


நான் பேசணும் நீ கேட்கணும்னு நினைக்கிறதே 

இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கும் 

வேலையா போச்சு..டிஸ்கஷன் அப்படினா ரெண்டு 

பேரும் பேசுறது தானே..

 


WORKING DAYS லயே வேலை செய்யாதவன் எப்படிடா சண்டேல 

வேலை செய்வேன்..புரிஞ்சிக்க மாட்றானே இந்த 

புண்ணாக்கு ரங்கன்..


 

நாமளா மதிச்சு சொல்லும்போது மதிக்காம,சொல்ல 

மாட்டேன்னு அடம்பிடிக்கும்போது தான் அதைப்பத்தி 

மட்டுமே கேட்பாங்க..#ஏன் பாஸ்..ஏன் கேர்ள்ஸ்..

 


ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு ஓவரா கவலைப்பட்டு 

தானும் டென்ஷனாகி நம்மையும் டென்ஷனாக்குவதே  

இந்த பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் வேலையா போச்சு..

 

பார்த்தவுடனே மயக்கம் வந்து ஒரு வித ஏகாந்த நிலைக்கு 

போவது காதலிக்கு அப்புறம் கமலைப் பார்க்கும்போது தான்..

#கிறுட்டு கிறுட்டுனே வருது..
 


அது எப்படிடா கரெக்டா , சரக்கடிக்க காசில்லாம 

காண்டா இருக்கும்போது வந்து மச்சி..இன்னைக்கு சரக்கா னு 

கேட்டு வெறுப்பேத்துறீங்க..?

 


சனிக்கிழமை சாயங்காலம் நாலு பசங்க சேர்ந்து என்ன சாமி 

கும்பிடவா போறோம்..சரக்கடிக்கத் தான் போறோம்..

இதை கண்டுபிடிச்சிட்டேன் கூவுது ஒரு பக்கி..


அரசு , வேகத்தடைகளை டாஸ்மாக் பகுதிகளில் 


அதிகமாக்கினா நல்லது..மாடு,நாய் எல்லாம் ஒதுங்கி 

போகுது..இந்த மனுஷப் பயலுக நகர மாட்றானுங்களே..


 

சில நேரங்களில் ஏமாற்றம் தருபவரை விட ஆறுதல் 

சொல்ல வருபவர்கள் மீதே அதிகம் கோபம் வருது..

#பிகர் கிடைக்காத காண்டுல இருக்கும்போது புத்தி 

சொல்ல வருதாம் நாயி.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்