Monday, July 9, 2012

மாத்தி யோசி .. 64

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 

தோண்டறதுக்கு முன்னமே பூதம் இருக்குனு சொல்றானுங்க..

ஏன் புதையல் இருக்கலாமே.. பாஸிட்டிவ்வா யோசிச்சு 

பழகுங்கடா டேய்..


 


பொய் எப்பவுமே உண்மையை விட வேகமாகவும்,தடையில்லாமளும்,

சரளகவும் வரும்..
 

உங்க மேல நம்பிக்கை இருந்தா மட்டும் நம்பி கை வைங்க..

சத்தியமா இது டபுள் மீனிங் தான்…

 


ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்து பின் 

மாட்டுவதை விட,சொல்லி மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் 

ஆவது பரவாயில்லை..#ப்ராடுனு பேர் வராமலாவது இருக்கும்...
 


ஒருத்தருக்கொருத்தர் காதலை வித்துக்குற இந்த காலத்தில 

ஒருத்தியை உண்மையா காதலிக்கணும்னு 

நினைக்கிறது தப்பு தான்..

 

தவறுகள் செய்யாமல் வெள்ளை காகிதமாய் வீணாய்ப் 

போவதை விட,சில பிழைகளுடன் காதல் கடிதமாகவே 

வாழ்கிறேன் நான்..

 


கெட்டவனாவே இருப்பதில் ஒரே நன்மை யாருக்கும் 

விளக்கம் கொடுக்க தேவை இல்லை..

 


திருந்தி வாழ்வதில் உள்ளே ஒரே தீமை ஒவ்வொரு 

கணமும் நம்மை நிரூபிக்கிறது…
 


காதலிக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன..?

 
 
சந்தோஷம் வருத்தமா மாற ஆகும் நேரத்தை விட ,
 
வருத்தம் சந்தோஷமா மாற ஆகும் நேரம் குறைவு ..
 
#தேடிப்பாருங்க மக்களே ..அத்தனையும் ஆனந்தம் தான் ..

2 comments:

அகல்விளக்கு said...

ரைட்டு....

வெளங்காதவன்™ said...

தங்கள் பொன்னான முத்துக்களைப் பார்த்து....

நிக்காமப் போகுது....

நன்னி!

#பன்னாட... பரதேசி.... ஆபீஸ் டைம்ல இப்புடி கண்டதை எழுதிட்டு இருந்தா, அப்ரைசல் டைம்ல தலையில இருக்குறத புடிங்கிக் கொடுக்காம என்ன பண்ணுவான்?