Friday, February 3, 2012

செல்லமடி நீ எனக்கு..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஆழ்கடல் போல நான்..யாரும் நெருங்க முடியாமல் இருந்த 

என்னுள்,சூரிய வெளிச்சம் போல எளிதாய் நீ நுழைந்ததால்..

செல்லமடி நீ எனக்கு..


எத்தனை தூரத்தில் இருந்தாலும் என்னைப்பற்றிய 

எல்லாமும் தெரிந்து,என் இன்னொரு உயிராய்,உருவமாய் 

நீ இருப்பதால்..செல்லமடி நீ எனக்கு..


வெளிப்படுத்தாத என் மனக்காயங்களையும்,என் கண்களைப் 

பார்த்தே கண்டறிந்து மருந்திடும் என் தாயுமானவளுமாய் 

நீ இருப்பதால்..செல்லமடி நீ எனக்கு..


முகத்தைப் பார்த்து வெறுத்தவர்கள் மத்தியில் என் 

அகத்தை பார்த்து நேசித்ததால்.. செல்லமடி நீ எனக்கு..

 
உண்ணும்போது ஊட்டிவிட சொல்லி,உறங்கும்போது 

என் தலைமுடிக் கலைத்து என் கோபப்பார்வையில் மருண்டு 

நின்று,பின் அழுகையுடன் என் மார்பில் சாய்ந்து என் 

குழந்தையாகவும் நீ இருப்பதால்.. செல்லமடி நீ எனக்கு.



அனைவரையும் அலட்சியப்படுத்தியே பழக்கப்பட்ட என்னை , 

அன்பு என்னும் ஆயுதம் கொண்டு முழுமையாக 

ஆட்கொண்டதால்.. செல்லமடி நீ எனக்கு..



படைப்புகளை விடுத்து படைத்தவனை நோக்கிச் செல்லும் 

ஞானியைப் போல பெண்களை விடுத்து தேவதையான உன்னை 

நோக்கி என்னை இழுப்பதால்..செல்லமடி நீ எனக்கு..



உரிமை கொண்ட உறவுகள் பல இருக்கலாம் உனக்கு,

ஆனால் எனக்கென எல்லாமுமாய் நீ மட்டுமே இருப்பதால்.. 

செல்லமடி நீ எனக்கு..



ஆண் அகலிகையாய் இருந்த எனக்கு பெண் ராமனாய் 

வந்து உன் விரல் தீண்டலில் தீட்சை தந்ததால்.. 

செல்லமடி நீ எனக்கு..



நீ என்னை எத்தனைக் காயப்படுத்தினாலும் , என்னை விட்டு 

விலகியே இருந்தாலும் எப்போதுமே

செல்லமடி நீ எனக்கு..

No comments: