Monday, February 20, 2012

மாத்தி யோசி ..58

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



வாழ்க்கையில ஒருமுறை மட்டுமே உண்மையானக் 

காதல் வரும்..அப்படி இல்லாம அடுத்து அடுத்து 

வந்துக்கிட்டே இருந்தா.. வா மச்சி..நீ என் ஜாதி..




எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமா இருப்பவன் பல 

பேருக்கு பைத்தியக்காரனா தெரியலாம்.ஆனாபைத்தியம் 

பிடிக்காம இருக்க அது தான் வைத்தியம்னு பல 

பேருக்கு தெரியல.



காதல் வருவதை யாராலும்,எதாலும் தடுக்க முடியாதுன்னு 

சொல்றவன் விளக்குமாறு அடியும்,பெல்ட் அடியும் 

வாங்காதவனா தான் இருப்பான்.



MISS YOU னு சொல்லி நடுராத்திரியில போன்ல ஊளையிடுறதை 

விட , பசங்களோட மிக்சிங்கோட மலை ஏறுவது நல்லது

தானே.# செம காண்டுல இருக்கேன்.


ஆணாதிக்கம்,பெண்ணுரிமைன்னு சண்டை வந்தாலும்

பரவாயில்லை.#பொண்ணுங்க தண்ணிக்குடத்தை 

இடுப்பில் தூக்கிக்கிட்டு நடக்கும் போது அவ்வளவு அழகு.




பஸ்,பிரியாணி ரெண்டுலயும் பீஸை பார்த்ததுக்கு 

அப்புறம் தான் சந்தோஷமே வருது



100 % கஷ்டப்பட்டு உழைச்சும் பலனில்லைன்னு 

புலம்புறானுங்க..அட பதறுகளா.. 50 % கவனமா 

உழைச்சாலே பிரச்சினை வராதே..



பிரச்சினைகளுக்கு நடுவில நாம புழுங்கி கிடந்தாலும் , 

சிரிப்பை ஏன் சிறையில அடைத்து வைக்கணும்..

#சிரிங்க..எல்லாரும் சிரிங்க..இல்லைனா 

பூமா தேவி சிரிச்சிட போறா..




காதல் புனிதமானதுன்னு தான் சொல்லிக்கிட்டு

திரிவானுங்க..அவனவன் ஏமாறும் வரை..

# உஷாரய்யா உஷாரு..


எல்லாருக்கும் கெட்டவனா தெரிஞ்சாலும் யாரோ 

ஒருத்திக்கு நல்லவனா தெரிவேன்ற நம்பிக்கையில 

தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்..# நீ எங்க இருக்க ஹனி..

No comments: