Sunday, February 26, 2012

ஏன் இப்படி ...58

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





நாம வருத்தத்தில இருக்கும்போது நமக்கு பிடிச்சவங்களை 

விட நம்மை பிடிச்சவங்க தான் முதலில் பதறி அடிச்சு 

வர்றாங்க..#ஏன் இப்படி.



சில பசங்க சாதிக்கணும்,சம்பாதிக்கணும்,செட்டில் 

ஆகணும்னு நினைக்கிறாங்க.ஆனா அவனுங்களுக்கு 

தான் கரெக்ட் பண்ணனும்,கலெக்ட் பண்ணனும்,கழட்டி 

விடணும்னு நினைக்கிற பொண்ணுங்க மாட்டறாங்க..#கொடுமை.





வாழ்க்கை ஏன் இப்படி விஜய் படம் மாதிரி வகை தெரியாம 

மொக்கையா போகுது…ச்ச..



என்னைக்காதலிங்கனு சொன்னாலும் எவளும் கேட்க மாட்றா..

சரி நான் காதலிக்கிறேன் னு சொன்னாலும் ஏத்துக்க

மாட்றாளுங்க..உங்களுக்கு என்னதான் பிரச்சினை 

பொண்ணுங்களா..?




யாரும் இல்லாம தனியா வாழவும் பழகிக்கணும்..

# எப்போ அத்துவிடுறாங்கனே தெரியல..நான் இன்னும் 

அம்மாஞ்சியாவே இருக்கேனோ..





ஒவ்வொரு கல்யாணத்திலும் என்னைக் கடுப்பேத்துற 

ஒரே கேள்வி..உனக்கு எப்போ கல்யாணம்..?# என்னமோ 

நான் இப்போ வேண்டாம்னு சொன்னமாதிரி..எவனும் 

பொண்ணு கொடுக்கமாட்றானுங்கடா 

புண்ணாக்கு ரங்கனுங்களா


 
பல நேரங்களில் பசுத்தோல் போர்த்திய புலிகளால்,

புலித்தோல் போர்த்திய பசுக்களுக்கு பிரச்சினை..

# வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எடை 

போடாதீங்க பொண்ணுங்களா..


கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு,நாம தனியா 

மாட்டிக்கிட்டதுக்கு அப்புறம் கூட்டத்தில வச்சி 

அட்வைஸ் பண்ணுறவனுங்களை கொன்னா என்ன..?



எல்லா உயிர்களிடமும் அன்போடு இருங்கள்னு சொல்றாங்க..

அப்புறம் ஏன் நான் எல்லா பொண்ணுங்களையும் 

காதலிச்சா மட்டும் காறித்துப்புறாங்க,,



பவர் கட் நேரம் அறிவிச்சது போயி பவர் இருக்கும் நேரம் 

அறிவிப்பாங்க  போல..பக்கிங்க..15 மணி நேரம் 

கட் பண்ணுறானுங்க.

No comments: