Thursday, June 30, 2011

ஜோக்கூ... Part 46

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




நீ தெருவில் போகும்போது உன் முகம் பார்க்க மறுக்கிறேன்.. 

உன்னை பார்க்க பிடிக்காமல் இல்லை.. 

கூட வரும் உன் தங்கச்சிக்கு நான் தனியா நூல் விடுறனே  ..



நிலவை பார்த்தால் நீ தூரமாக இருப்பதை உணர்கிறேன்.. 

ஆனால் உன்னுடன் இருந்த இரவை நினைத்தால் நீ 

பாரமாக இருந்ததை நினைக்கிறேன்..

பாவி மவ.. என்னா கனம் கணக்குறா..



நீ தந்த முத்தத்தின் ஈரம் காயும் முன்பே..

உங்கண்ணன் தந்த குத்து காயம் ஆனது அன்பே..

அவன் அண்ணன்காரனா இல்ல அடியாளா..



வெகு தூரம் சென்றாலும் விண்மீன் மறைவதில்லை

 விடியும் வரை.. விலாவுல குத்தினாலும் விடுவதில்லை..

நீ மடியும் வரை.. 

அடிக்கு எல்லாம் பயந்தா ஆப்பம் கிடைக்குமா…



உன்னை தேடும் என் கண்களுக்கு ஆறுதல் வேறு ஒரு

 பிகர் மட்டுமே.. நினைவுகளை வைத்து நான் 

என்ன நாக்கா வழிக்கிறது..



உன் அனுமதி இல்லாமல் உன்னை தொடுவேன்.. 

காமக்கொடுரனாய் அல்ல.. 

கனவில் உன் காதலனாய்..( வேற என்ன பண்ணி தொலையுறது..)

No comments: