Sunday, March 25, 2012

ஏன் இப்படி ...59

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




வேலை சொல்றவன் வெளங்காத கூமுட்டையா இருந்தா , 

வேலை செய்யுறவன் எப்படி வெறுப்பில்லாம விருப்பத்தோட 

வேலை செய்வான்..#புண்ணாக்கு ரங்கனுங்க 

புரிஞ்சிக்கவே மாட்றானுங்களே..





கனவு காணுங்கனு கலாம் சொல்லிட்டாரு..அவர் 

வயசு அப்படி..கெரகம்..நான் கண்ணை மூடினாலே 

காதல் தொல்லை தான்..# என்ன எழவுடா இது..




பொண்ணுங்ககிட்ட பேசும்போது நாம நல்லா இருக்குறதும்,

நாசமா போறதும் நாக்கு நுனியில்தான் இருக்கு..

#ஒரு வார்த்தை சொல்லிட்டேன்…

ஒரு வாரமா பேச மாட்றா..








காரணமே சொல்லாம கோபப்படுறதும்,கோவிச்சுக்குறதும்..

#ச்ச..செம வெறுப்பாகுது..அட பன்னாடைகளா..சொல்லுங்கடா 

நான் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன்..






எல்லாப்பூட்டுக்கும் சாவி இருக்குமாம்..எல்லாப்பிரச்சினைக்கும் 

தீர்வு இருக்குமாம்..பெண்களிடம் ஆண்களுக்கு வரும் 

பிரச்சினை நம்பர் லாக் போல.. தாவு தீருது.






உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு நாங்க சொன்னா

போதும்..எல்லாரும் வாலி பட சிம்ரன் கணக்கா 

கெத்து காட்றீங்க..# ஏன் பொண்ணுங்களா.. 






சில பேருக்கு இந்த இணையத்தைத் தாண்டியும் உலகம் 

இருக்குனு எப்படி புரிய வைக்கிறது…? 

# வித விதமா வெறுப்பேத்துறாங்க…





பெண்களின் ரியாக்ஷனை புரிஞ்சிக்கிறவன் 

பெரிய புத்திசாலிதாங்க..#எனக்கு சுத்தமா 

வெளங்க மாட்டுது..பிடிச்சிருக்குன்னு சொல்றாளா..

இல்ல ஓடிப் போயிடு நாயேன்னு சொல்றாளா…?





ஒரு தப்பை ஆண்கள் செய்தா ஒரு மாதிரியும்,அதே தப்பை 

அவங்க செய்தா வேற மாதிரியும் ரியாக்ஷன் கொடுக்க 

பெண்களால் மட்டுமே முடியும்..# என்னா திறமை..





ஒரு தப்பை பண்ணிட்டு பொண்ணுங்க கிட்ட சொன்னா..

பக்கம் பக்கமா திட்டிட்டு நாலு வார்த்தையில அட்வைஸ்

பண்ணுறாங்க..# பெண்களை புரிஞ்சிக்க எக்ஸ்ட்ரா 

மூளை வேணும் போலயே..