Friday, March 30, 2012

மாத்தி யோசி .. 60

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




உண்மை பேசினா சொன்ன எதையுமே ஞாபகம் 

வச்சிக்க வேணாம்..பொய் பேசினா ஞாபகம் வச்சிக்கணும்..

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரே வழி..

பொய் பேசுறது தான்..





என்னைப்புரிஞ்சிக்குங்கனு நாம ஒவ்வொருத்தருக்கிட்டையும்

கெஞ்சுவதுக்கு பதிலா, நாம அவங்களை புரிஞ்சிக்கிட்டு 

ஒதுங்கிடலாம் போல..# குறிப்பா பெண்களிடத்தில்..முடியல.





காட்டில் வாழணும்னா கருணை பார்க்க கூடாது..

காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னா காறித்துப்பல்களுக்கு 

எல்லாம் கவலைப் படக்கூடாது..






நான் விரும்பியபோது என்னை விட்டு விலகாத பெண்கள் 

தேவதைகள் னா.. நான் விலகி இருக்கும்போதும் என்னை 

விரும்பும் பெண்கள்..? # வார்த்தைகளுக்குள் வராத வரங்கள்..






எவனோ சொன்னதை நாம ஏன் பாஸ் கடைபிடிக்கணும்..

நாமே சுயமா சிந்திப்போம்..#அதை விட என்ன 

கழட்டுற வேலை..






ஒவ்வொரு முறையும் ஒரு பொண்ணு என்னைக்

கேவலப்படுத்தும்போதும் எனக்கு நானே சொல்லிக்கிறது..

# அப்புறம்.. அடுத்து எந்த பிகர்டா..?





கற்றுக்கொடுக்க நினைக்காம..கற்றுக்கொள்ள நினைத்தால்

மட்டுமே உருப்பட முடியும்னு சொல்றானுங்க..# அப்போ யார் 

தான் கற்றுக்கொடுப்பது…? என்னாங்கடா யாவாரம் பண்றீங்க..




தாய்மை,காதல்,பயம் இதுக்கெல்லாம் மொழி,இனம் னு எந்த 

பாகுபாடும் கிடையாது..அந்த வரிசையில் எப்போ பணம் 

சேர்ந்துச்சோ அப்போவே அழிய ஆரம்பிச்சாச்சு..






பொண்ணுங்க அதிகாரத்தோட சொல்லும்போது மதிக்கவே 

தோண மாட்டுது..அதையே கெஞ்சலா சொன்னா 

கஷ்டமா இருக்கு..கொஞ்சலா சொல்லும்போது 

ஜொள்ளிக்கிட்டே சரின்னு சொல்லிடுறேன்..#நான் சொல்பேச்சு 

கேட்கும் சூட்சுமம் இது தான் பொண்ணுங்களா..புரியுதா..?





பொசசிவ்ன்ஸ்சை பசங்க காதலிக்கும்போதும்,

பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறமும் தான் 

அதிகம் வெளிப்படுத்துறாங்க..ஹ்ம்ம்..

அதான் பிரச்சினையே..

1 comment:

ஆர்வா said...

அடேங்கப்பா.. பஞ்ச்ஸ்....

நட்புடன்
கவிதை காதலன்