Sunday, August 28, 2011

ஜோக்கூ... Part 48

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன்னை காதலிக்கும்போது எனக்கு எதைக்கண்டும் 

பயம் இல்லை..கல்யாணமான பின்போ
 
ஜல்லிக்கரண்டி , பூரிக்கட்டைக்கு எல்லாம் பயப்படுகிறேன்.. 

முடியலை டி.. வலிக்குது..




நீ என்னை வெறுப்பது தெரிந்தும் உன் பின்னால்

நான் அலைவதால் என்னை முட்டாள் என்று எண்ணாதே.. 

எனக்கு வேற சாய்ஸ் இல்ல..



நீ என்னுடன் இல்லாததை நினைத்து நான் அதிகம் 

வேதனைப்படும் தருணம்.. உச்சி வெயில்ல கிச்சு கிச்சு

மூட்டிகிட்டு கிஸ் அடிக்கிற ஜோடிகளை பார்க்கும்போது தான்.. 

கடுப்பேத்துறானுங்க மை லார்ட்..



மவுனமாக இருக்கும்போதும் சேர்ந்து இருப்பதும் , 

பேச ஆரம்பத்திது விட்டால் பிரிந்து விடுவதும் உதடுகளுக்கு

மட்டுமல்ல.. உனக்கும் எனக்கும் கூட பொருந்தும்.. 

ரீசார்ஜ்  பண்ணிவிடு , ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போ , 

சுடிதார் வாங்கி குடுன்னு நச்சு நச்சுனு...





பிரிவை கண்டு நான் வருத்தம் கொள்ள மாட்டேன்.. 

அப்போ தாண்டி உன் மவுசு உனக்கே தெரியும்..

ஒரு பய சீண்ட மாட்டானே..



நடுராத்திரி sms இல்லை.. கக்கா போகும்போது missed call இல்லை.. 

மாசக்கடைசியில் மொபைல் பேலன்ஸ் மைனசில் இல்லை..

ஏனென்றால் எனக்கு காதலி இல்லை..