Tuesday, August 30, 2011

ஏன் இப்படி ..PART 29

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பெண்கள் மன்னிப்பு கேட்கும் அனேக தருணங்களில் 

தவறு ஆண்களுடையதாகவே இருக்கிறது..

#நேத்து வரைக்கும் கிடச்ச அனுபவத்தை வைத்து..




1000 ஆண்கள் தவறாக நினைத்தாலும் வருந்தாத மனது ஒரே 

ஒரு பெண் தவறாக நினைத்தாலும் வலிக்கிறது...

#நான் கெட்டவன் தாங்க..ஆனா கேவலமானவன் இல்ல..




போற போக்கை பார்த்தா போதையில வாந்தி எடுத்தது,

பொண்ணுங்க பின்னால போயி அடி வாங்கியதுன்னு 

எல்லாத்துக்கும் # போட்டு கமெண்ட் அடிப்பாங்க போல...முடியல...





உன் வாழ்க்கை எப்படி இருக்குனு என்னை யாராவது கேட்டா..

அவளுக்கு என்ன..ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா 

இருக்கா னு பதில் சொல்றேன்..




ன் கவிதை நல்லா இருக்குடா..எல்லாத்தையும் அனுப்பி 

வைன்னு சொன்னா..அனுப்பி ரெண்டு நாள் ஆகுது..

அதை பத்தி ஒண்ணுமே பேச மாட்றா..என்ன எழவுடா இது..




அத்தனை பெண்களையும் நான் சைட்டடிப்பது..

அவர்களுக்கு எந்த வித தாழ்வு மனப்பான்மையும் வரக்கூடாது

என்பதற்காகவே..# ஹ்ம்ம்..என் நல்ல மனசு எவளுக்கு புரியுது..


செவப்பான பொண்ணு தான் வேணும்னு கேட்குற பசங்களுக்கும்,

செட்டில் ஆன பையன் தான் வேணும்னு கேட்குற 

பொண்ணுங்களுக்கும் ஒரே கேள்வி...

"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..?"


ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..

பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..

ஏன் இப்படி..




இது நமக்கு எத்தனாவது சுதந்திர தினம்டான்னு 

கேட்டா தெரியலை..மங்காத்தா அஜித்க்கு ஐம்பதாவது படம்னு 

அலப்பறை கொடுக்குது இங்க ஒரு பக்கி..



ட்ராவிடை ODI யில மறுபடியும் சேர்த்துட்டாங்கடானு 

சோகமாய் சொல்றான் ஒருத்தன்...? அட பிக்காலி பயலே..

சீரிஸ்ல ஒழுங்கா விளையாடினது அவன் மட்டும் தான்..

No comments: