Friday, August 20, 2010

உளறல்கள்...( உணர்வுகள் னும் சொல்லலாம் )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பொத்தி..பொத்தி..வச்சது...

இப்ப பொங்கிடுச்சு...

பிடிச்சி இருந்தா சொல்லுங்க... 


பிடிக்கலைனாலும் சொல்லுங்கப்பா...




உன்
முத்தத்திற்கு
தினம் தினம்
படையெடுக்கும்
நானும்
கஜினி முகமதுதான்





அன்பே
ஏனடி இப்படி
பொங்குகிறாய்..


நீ என்ன
அடுப்பில் வைத்த
பாலா!?!?


இல்லை
ஆட்டி குலுக்கிய
பீரா!?!?


மாமா நான்
பாவம் இல்லை.... 





உனக்காக நான் காத்திருக்கும்
போதும் நீ எனை கொல்கிறாய்...
நான் பிடிக்கும் சிகரெட்டுகளாய்..


இரு வரி கவிதை
உன் இதழ்கள்
அதில் வார்த்தைகளாய்

எந்தன் முத்தம்....


ஆரஞ்சு சுளைக்கு
திருஷ்டிப்பொட்டு... 
உன் உதட்டு மச்சம்...







அலையும் கூந்தல் முகத்தை மறைக்க
ரகசிய உதடுகள் காது கடிக்க
உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க
மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக
கால்கள் அகற்றி தொடைகள் உரச
கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த
இந்த இறுக்கம்
காதலா..?
காமமா...?
நம்பிக்கையின்மையா..?
அறிந்து கொள்ள ஆசை
மனம் பிறழ்ந்து போகும் முன்..

கடைக்கண் பார்வைதனை
கன்னியர்கள் காட்டிவிட்டால்
மண்ணில் மாந்தர்கு
மாமலையும் ஓர் கடுகாம்...!

படித்து சிரித்த வரிகளை
படித்து ரசிக்க வைத்தாயடி..

எத்தனை முறை
கேட்டாலும் கூட
அலுப்பதே இல்லை - எனக்கு
உன் செல்போன் முத்தம்...!!
 

கொடுத்தால்
மட்டுமல்ல - கவ்வி
எடுத்தாலும் சலிக்காதது
முத்தம்..

நான் முத்தம்
கேட்கும் போது
மறுத்து நீ சிணுங்குவது
உன் முத்தத்தை விடவும்
கிக்கானதுதான்..
முத்தமே தந்திடடி...

நீ பேசும்
எல்லா பேச்சையும்
எனக்கு சொல்லும்
உன் அலைபேசி - நீ
எனக்கு தரும்
முத்தங்களை மட்டும்
திருடிக்கொள்கிறது...

நேரில் வரும் போது 
சேர்த்து தந்திடு...
கொஞ்சிக் கொஞ்சி
ஒரு முத்தம் கேட்டேன்
கெஞ்ச வைத்து
விட்டாயடி...

குடுத்தால் என்ன
குறைந்தா போய்விடுவாய்
எப்போது வேண்டும் சொல்
திரும்ப தந்துவிடுகிறேன்..
என் காது மடல்களில் இன்று 
கற்கண்டு சுவை..
பேசி முடிக்கையில் நீ தந்த
செல்போன்  முத்தினால்...

 
நானே
நானாக இல்லை - காதில்
கேட்பதெல்லாம்
வேறாக தொல்லை
எல்லாம்
உன்னால் பெண்ணே
நான் முத்தம் கேட்டு
அடம்பிடிக்கும்
சிறு குழந்தை...!

முத்தம் பெற்றதும்
பலம் கொண்ட
மத யானை...!



நிகோடின் ஏறிய என் இதழ்களில்
இன்று இனிப்பு சுவை..
உன் உதடுகள் தந்த
ஒத்தடத்தால்...
காதல் பேசும்போது
வெட்கி சிவக்கிறாயாம்..
உன் தோழி சொல்கிறாள்..
வெளியில் சொல்ல போகிறாள்..
காதல் மேல்
ஃபேர் அண்ட் லவ்லி - கம்பெனி
கேஸ் போட போகிறார்கள்...

நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
மனதுக்குள் வைத்திருப்பேன்
தண்டனை உண்டு
எல்லாவற்றிற்கும்..!!







இதுதான் உனக்கான
தண்டனை என
நிழற்படம் அனுப்பினால்
ச்சீ என்கிறாய்....
வேண்டாமடி... தண்டனை
அதிகமாகிகொண்டே போகும்...!!!

மணல் வீடாய்
காதல்..
மழையோ
அலையோ
உடைந்திடும்
கனவாய்..
வாழ்க்கையை
யோசிக்கிறேன்
நான்..
நான் மாறியதாய்
யோசிக்கிறாய்
நீ...






படித்து முடித்திட
முடியா பாற்கடல்
படித்த பின்பும்
புரியா பாடமவள்





காலைச் சுற்றும்
நாயவள்
விழித்திருக்கும் போதும்
கனவு அவள்
 



இருப்பதைப் போல்
இல்லாதவள்
இல்லாதவள் போல்
இருப்பவள்



தேவதை கட்டிய
தாவணியவள்
சுடிதார் போட்ட
தேவதையவள்  



அங்கும் இங்குமாய்
ஈருடல்
நினைவுகளுடன் தினம்
போராடல்
 



கொஞ்சும் குழந்தையவள்
இளமை பொங்கும்
குமரியவள்
தாய் அவள்  



சிரிப்பில் கொல்பவள்
அன்பில் வெல்பவள்
இயக்கிடும் இயக்கமவள்



உயிர் அவள் ..
என்னை மயக்கிடும்
க்ளோரோபார்ம் அவள்..
உயிரியக்கிடும் ஆக்ஸிஜனும் அவள்...
வெட்கத்தை எல்லாம் - நீ
அங்கே சிந்திக்கொண்டிருக்கிறாய்
நான் எப்போதடி பார்ப்பததை...
நீ ஓர் இடத்தில்
நான் ஓர் இடத்தில்
சேமித்து வையடி
எனக்காகவும் கொஞ்சம்....




கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்

அடுத்தாய் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. 



நேற்று என் கனவில்
நீ வந்த
ஐந்தாவது நிமிடம்..
உன் வெட்கமும்
என் வெட்கமும்
என் கட்டிலின்
இடது மூலையில்..
அன்பை பொழிந்தாள்
மழையாய்..
மனதை மாற்றினாள்
சிறுபறவையாய்..
மிதக்க செய்தாள்
புவியிருந்து
அரையடி
மேலாய்..

கண்கள் சொருகும்
ஆல்கஹால் மயக்கம்
அவளின்
சிறு சிரிப்பினில்  

மனதின்
அருகினில் வந்தாள்
மயில்போல் நின்றாள்
விழி வீச்சினில்
கொன்றுவிட்டாள்

தேவதை அவள்
தரிசனம்
கிடைக்கிறது
அனுதினம்...
வாழ்விலே
புது இன்பம்
தருகிறாள்
நித்தம் நித்தம்..

உச்சி முதல்
உள்ளம்கால் வரை
ஆசை துடிக்குது
அள்ளித் தின்ன...
அதை சொன்னால்
வெட்கத்தினால்
ஓடுகிறாள்
கால்கள் பின்ன...

கவிதை போலவே
வாசிக்க விரும்புகிறேன்
காதலியே உன்னை..
தாள்கள்
அனைத்தும்
வெள்ளையாய்...
நீ
இங்கில்லா
வெறுமை போல...


வாழ்க்கையில் சுனாமியை
அறிந்து இருக்கிறேன்
உணர்ந்ததில்லை
என் வாழ்க்கையில் நீ
என்னை அடித்து செல்லும் வரை....

தூக்கத்தை தொலைத்த
என் இரவுகளுடனும்....
துரத்தி துரத்தி கொத்தும்
உன் நினைவுகளுடனும் ...
காத்திருக்கிறேன் உனக்காக...




"புல்வெளி மீது நடக்காதீர்"
அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."

"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."

"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."

"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."

"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."

"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"

"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."
"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."


முத்தமிடப்படும்
ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
உடைகள் நழுவுவதையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்...