Friday, January 30, 2015

ஏன் இப்படி ...88

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



இந்த நாதஸ்வரம் சீரியலை ஞாயிற்றுக்கிழமை மட்டும்

தான் போடலை போல..மற்ற எல்லா நாளும்

ஊதுறானுங்க..#முடியலைடா டேய்..



50 கி.மீ. தினமும் ட்ராவெல் பண்ணி அசதியா வந்து

"அம்மா பசிக்குதுனு" நான் ஈனஸ்வரத்தில முனகினாலும்

நாதஸ்வரம் முடிஞ்சு தான் சோறு கிடைக்குது..




நேத்து அடுத்தடுத்து ரெண்டு சீரியல் பார்க்கிற துர்ப்பாக்கிய

நிலைமைக்கு ஆளானேன்.. ஒண்ணுல டைவர்ஸ் கேஸு 

ஓடுச்சு..ஆன்ட்டியை உஷார் பண்ணவன் பக்கத்திலேயே

நின்னான்.. இன்னொண்ணுல ஒரு படி மேல போயி 

டைவர்ஸ் ஆகாமையே ,கல்யாணம் பண்ணி ரெண்டாவது

புருஷன் கிட்ட முதல் புருஷன் வந்து இருக்கான்னு 

சொல்லுது..# நான் ஒரு நாள் சீக்கிரம் வந்தது குத்தமாடா...????



எல்லா சீரியலையும் ஒரு டைவர்ஸ்ஆனது,

ஆகப்போறது,கல்யாணத்துக்கு அப்புறம் உஷார் ஆனது,

உஷார் பண்ணி மாட்டுனது இப்படியே ஓடும் போல..!@#$%

No comments: