Saturday, December 29, 2012

முற்றுப்புள்ளி முத்தம்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 
கண்களில் சிரித்து உதட்டில் நீ தரும் முத்தத்துடன் 

உதயமாகும் ஆசிர்வதிக்கப்பட்ட என் தினங்கள்,இரவினில் 

இறுக்கமான அணைப்பின் வழியே உன் 

கருங்கூந்தலில் அஸ்தமிக்கின்றன..


 
என் நினைவுப்பாசிகளை தெளிய வைக்கும் படிகாரமாய் 
 
உன் பார்வை..


உன் அருகில் வர எத்தனிக்கையில் ,ஏதோ ஒன்று என் 
 
கால்களைக் கட்டி இருக்கும் கயிறாய் இறுக்க..உன் 
 
புன்னகைக்கும் பார்வையில் கட்டவிழ்க்கிறாய் நீ.
 
#தேவதை ஸ்த்ரீயடி நீ..



பாழடைந்த கிணறாய் தோன்றும் இந்த 
 
வாழ்க்கையில்,படிகளெனத் தோன்றுதடி உன் பாதச்சுவடுகள்..



தென்னங்கீற்றுகளுக்கு இடையே தோன்றும் சூரிய ஒளியாய்..
 
உன் கற்றைக்கூந்தலின் வழியே என் மீது சிதறுதடி உன் 
 
வெட்கப் புன்னகைகள்..



உறைந்த கிணறாய் இருந்த என்னுள்..சிறுவர்களின் 
 
உற்சாகக் கூச்சலாய்  உன் சிரிப்புச் சத்தங்கள்..


நீ  குளித்து முடித்து வருகையில் பாதி ஈரத்தை தூவாலையால் 
 
நீயும்,மீதி ஈரத்தை என் விழிகளால் நானும் துடைக்கிறோம்


பூக்களால் செய்த உன் உடலில் பனித்துளிகளாய் 
 
தோன்றும் நீர்த்திவலைகள்.. என் உதடுகளால் ஒத்தி 
 
எடுக்கிறேன் வா.!!!

நீ கூந்தல் உலர்த்துகையில் தெறிக்கும் நீர்த்துளிகள்.. 
 
என் மீது மட்டும் பொழியும் இனிமை சாரல்..

 

நம் உரையாடலின் முற்றுப்புள்ளியாய் முத்தம் 
 
வைக்கிறேன் நான்..மேலும் சில முத்தங்கள் தந்து 
 
அதை தொடர் வாக்கியமாய் மாற்றுகிறாய் நீ 
 
# லவ்யூடி பம்ப்ளிமாஸ்

No comments: