Sunday, December 30, 2012

ஏன் இப்படி ...70

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கூட 

IRCTC ல டிக்கெட் புக் பண்ணினான்னா "போங்கடா !@#$%^&"

னு சொல்லுவான்...#நாக்குத்தள்ளுதுடா சாமி

 



நல்லதுக்கு ஒண்ணு சேருறாங்களோ இல்லையோ ஒருத்தனை 

போட்டு விட அத்தனை பேரும் எங்க இருந்து தான் 

கிளம்பி வர்றானுங்கனே தெரியலையே ஆண்டவா..

 



" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் " படத்தோட 

சிடி வாங்குனேன்..அட கெரகமே..நடுவுல கொஞ்சம் படத்த 

காணோம்..# தியேட்டருக்கு போங்கப்பா..
 



கொடுத்த வேலையை ஏன் முடிக்கலைன்னு கேட்கும்போது 

தான் தெரியுது…ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்கும் 

கதை சொல்லிகள்…# காதுகள் வலிக்குதுடா சாமி..

 



சலிக்காம பேசுறதை பெருமையா எண்ணுபவர்களே,அந்த 

கருமத்தை எல்லாம் சகிச்சுக்கிட்டு கேட்கும் எங்களை 

கொஞ்சம் நினைத்து பாருங்களேன்..

#வெளிய விடமாட்றாங்கடா டேய்..
 




ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு 

சொல்லிக் குழப்பிட்டு,உங்களுக்கு எத்தனை தடவை தான் 

சொல்றதுன்னு அலுத்துக்குறவங்களை அடுப்பில் போட்டா என்ன..?

 



"வழிகாட்டியாய்" இருக்க வேண்டிய பலர் , நமக்கு 

"வலி காட்டிகளாகவே" இருக்கிறார்கள்..

# பாஸ் பாறைகள்.. 




கேட்குறதுக்கு கொஞ்சம் பேர் இருக்கானுங்கனு பேச 

ஆரம்பிக்கிறவங்களுக்கு இன்னொரு வாய் வந்துடுமா 

என்ன..? எப்படிடா முடியுது உங்களால…?

 



இவன் ஒரு வாயால பேசுறதை எங்களுக்கு ரெண்டு காது 

இருந்தும் கேட்க முடியலையே..? கேட்குற நாங்க 

டயர்ட் ஆகி கொட்டாவி விடுறோம்..தக்காளி 

தெம்பா பேசுறானே..?

 




அடுத்தவன் பிரச்சினைகளுக்கு ஏகப்பட்ட ஐடியாக்களை 

அள்ளித் தெளிக்கிறவனுங்களை , ஏன் உங்க வேலை 

முடியலைன்னு கேட்டா கரகாட்டக்காரன் செந்தில் 

போல ரியாக்ஷன் கொடுக்குறானுங்க..

# உனக்கு ஏன் இந்த வேலை…?

No comments: