Monday, December 31, 2012

ஹனி.. இச்சை செயல்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


என்னை மறந்துவிட்டாயா என்கிறேன்..

" நான் இன்னும் உயிரோடதான்டா இருக்கேன் " என்கிறாய்..

# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..



 


உன்னுடன் பேசவேண்டாமென நினைக்கிறேன்..கைகள் 

ஏனோ உன் அலைபேசி எண்களை தானாக அழைக்கிறது 

என்கிறாய்.. இது அனிச்சை செயல் இல்லை 

ஹனி.. இச்சை செயல்..


 


உன்னைப்பிரிய எத்தனிக்கையில் உன் குரல் கேட்டவுடன் 

மனம் மாறுகிறேன் என்கிறாய்.. பைத்தியக்காரி.. 

இப்போது புரிகிறதா..? எதுவாயினும் என் கண்களைப் 

பார்த்து சொல் என்பதன் அர்த்தம்..



 


 
என்னிடம் அத்தனை உண்மைகளையும் மறைக்காமல் கூறும் நீ,

நான் உனக்குள் இருப்பதை மட்டும் வெளிப்படுத்த மறுக்கிறாய்..

# ராட்சஸி..

 

 
எனக்காக வலிகளைத் தாங்கும் நீ,அதையே நான் செய்தால் 

மட்டும் ஏற்க மறுக்கிறாய்..உன்னை விட்டு நான் எங்கேடி 

செல்ல…? # பம்ப்ளிமாஸ்..


 


மிகவும் குளிர்ச்சியாக சூரியன் தோன்றிய தருணம் நீ 

என்னுடன் கடற்கரையில் இருந்த நேரம்..என்னைப்பிரிந்த 

ஐந்து நிமிட இடைவெளியில் அதே சூரியன் உக்கிரமாகவும் 

தோன்றுதடி..

 



நீ முத்தமிட்ட பிறகு நீண்ட நேரம் என் நாவில் ஏதோ ஒரு 

இனிப்பு கரைந்துக் கொண்டே இருக்கிறது.. முடிந்து விடும் 

முன் மீண்டும் ஒன்று தா..!!!

 



பத்து குதிரைகள் ஓடும் மைதானம் போல மாறுகிறது 

என் இதயம்..நீ முத்தமிட என்னை நெருங்கும் ஒவ்வொரு முறையும்..


 


ஆழ்கடலின் அமைதியும் அதீத அழுத்தமும் உண்டாகும் 

தருணம்..நீ என்னை முத்தமிட்ட கணம்..

 


மரணவலியில் துடிக்கிறேன்..உன் மார்பு சூட்டில் என்னைப் 

புதைத்து மருந்திடேன் ஹனி.. பிழைத்துவிடுவேன்..

No comments: