Monday, October 8, 2012

காதல் ரேகை

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நண்பர்கள் கூட்டத்தில் நான் இருக்கையில்,சிறு பறவை 

போல என்னைக் கடந்து செல்கிறாய் நீ.. என் உடலை விட்டு 

உயிர் மட்டும் தொடர்கிறது உன்னை..


நீ அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் அழகாய் 


ஜொலிப்பது நீ போட்டிருக்கும் முகப்பருக்கள் தான்.. 

மான்களை விட புள்ளி மான்கள் தானே எப்போதும் அழகு..




பூமியில் இருந்து அழிந்துவிட்ட ஒரு தொல் விலங்கை 


போல என் காதலும் மாறிவிடுமோ என அஞ்சுகிறேன்.. 

என் காதலைக் காப்பாத்து ஹனி..




அதிகாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் பட்டு 


தெறிக்கும் பனித்துளிகளை போல, உன் அதரங்களின் 

அரை முறுவல்களில் பட்டு தெறிக்கிறது என் காதல்..




உன் கண்களின் வெளிச்சம் கொண்டே என் காதல் ரேகை..


 உன் அரவணைப்பின் சுகம் கொண்டே என் ஆயுள் ரேகை..


பொய்களை காப்பதை விடவும் உண்மைகளை மறைப்பது 


மிகவும் கடினம்.. லவ்யூடி ஹனி..


கண்களுக்கு பின்னால் காதல் சமுத்திரத்தை எப்போதும் 

தயாராக வைத்திருக்கிறாய் நீ..நீ நெகிழும் தருணம் 

அதை வெளிப்படுத்துகிறாய் என் மீது..நான் தான்

 நிலைகுலைந்து போகிறேன்..அந்த காதல் சமுத்திரத்தில்..



உன்னை வெல்கிறேன் நான்..என்னை வெல்கிறாய் நீ..


நம்மை வெல்கிறது காதல்..



என் சுவாசம் கூட முழுதாய் வெளிப்பட மறுக்கிறது..


நீ என்னுடன் இல்லாத நேரங்களில்..



கடவுள் மீதும்,காதல் மீதும் முழுதாய் நம்பிக்கை 

வை என்கிறேன்..

"ம்..நம்புறேன்டா.. உன்னை மட்டும்" என்கிறாய்.. 

லவ்யூடி ஹனி..

No comments: