Thursday, October 4, 2012

ராட்சசி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


என் வலியை விட,உனக்கு வலிப்பதை என்னால் தாங்க 

முடியாது என தெரிந்தும் அடிக்கடி ஊடல் கொ(ல்)ள்கிறாய்..

# ராட்சசி..



உனதருகில் இருக்கையில் மட்டும் என் இதயம் வேறு 


விதமாய் துடிப்பது ஏனோ..?



பொங்கிவரும் காதல் கொண்டு நீ என்னைப்பார்த்து 


கண்களால் சிரிக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் 

ஒரு துடிப்பை தவற விடுகிறது..



நீ என்னை முத்தமிட நெருங்கும் அந்த கணம் 


எனக்குள் இன்னொரு இதயம் முளைக்குதடி..



உன்னைக்காணும் வரையில் சத்தமின்றி சூரியக்கடிகாரமாய் 


துடித்த என் இதயம்,உன்னைக்கண்ட கணம் முதல் 

அத்தனை இசைக்கருவிகளின் ஒலியோடு துடிக்கிறது.

மிக அழகாய்..




நீ தலைக்குளித்து ஈரக்கூந்தல் உலர்த்தும் காலை வெயில் 


நேரம் எனக்கு மட்டும் தெரியுதடி..அழகாய் ஒரு வானவில்..



என்னிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உன்னிடம் 


பதில் இருக்கிறது…சமயங்களில் கேட்காத கேள்விகளுக்கும்..




நீ என்னை நெருங்கி வரும் தருணம் மட்டும் நியூட்டனின் 


மூன்றாம் விதி பொய்த்துவிடுகிறது..

# அவ்வளவு காஞ்சு போயி கிடக்கிறேன்..



ஆள் அரவமற்ற அறையின் ஒரு ஜன்னலின் வழியே நுழைந்து 


மறு ஜன்னலின் வழியே வெளியேறும் சருகாய் என் காதல்..

 உன்னுள் நுழைந்து வெளியேறும் முன் கவனித்துவிடேன் ஹனி..

No comments: