Friday, January 13, 2012

செப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன சோக ஸ்டோரி.. 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அட.ச்ச..எப்பவுமே நான் கூட படிக்கிற 

பொண்ணுங்களையும், வீட்டு பக்கத்திலையும்,அதுக்கு 

அப்புறம் வேலை செய்யுற இடத்திலையும் 

பொண்ணுங்களை பார்க்கவோ,பேசவோ மாட்டேன்..

சீக்கிரம் விஷயம் வெளிய தெரிஞ்சுடும்னு.. 

ட்ரான்ஸ்போர்ட்டர்  படத்தில JASON STATHEM ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி மாட்டிக்கிட்டது போல என் ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி நான் மாட்டிக்கிட்டேனே..

( ENGLISH படம் பார்க்குறாறாம் .. ) இந்த முடிக்கு 

தான் இதெல்லாம் வேணாம்னு ஒதுங்கி இருக்க 

ஆரம்பிச்சேன்.. ஆனா அவ அதுக்கு அப்புறம் தான் 

ஓவரா புழிய ஆரம்பிச்சா ..பீலிங்க்சை..



நான் கொய்யா மரத்தடியில உட்காந்துகிட்டு பசங்க கூட 

போன் ல பேசுறது வழக்கம்.. இவ துணி துவச்சுக்கிட்டு

இருந்தா..நான் கண்டுக்கலை..அவளே கேட்டா..

ஏன் கணேஷ்..நாம சின்னவயசுல எவ்வளவு ஜாலியா

விளையாடினோம் ல..எதை பத்தியும்,யாரை பத்தியும்

கவலை இல்ல..ஹ்ம்ம்..இப்போ நெனச்சு பார்த்தா கூட

சந்தோஷமா இருக்கு.. அப்படியே இருந்து இருக்கலாம்..

உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒரு நாள் நாம ரெண்டு 

பேரும் மொட்டை மாடியில இருட்டுல உட்காந்து 

காலையில 3 மணி வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தது..

அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச நீல ஷர்ட் போட்டு இருந்த..

எனக்கு ஒரு எழவும் ஞாபகம் இல்ல.. ஆமாண்டி..இதை 

எல்லாம் நல்லா எழவு கொட்டு..ஆனா போலீஸ் ல 

போட்டு கொடுத்துடு நெனச்சுகிட்டு..

உனக்கு எல்லா ஞாபகம் இருக்கு போல..இப்போ 

மட்டும் என்ன ப்ராப்ளம்..பேச வேண்டியது தானே..

அது எப்படி முடியும்..யாராவது தப்பா நெனச்சா..

என்னனு 

எதோ ஒண்ணுனு..அதனால தான் நான் உன்கிட்ட 

சரியா பேசுறதே இல்ல..ஆனா உன் கூட பேசணும் 

போல இருக்கும் தெரியுமா..?



அடிப்பாவி..பொதுவா நான் தானே இப்படி எல்லாம் 

புரியாம பேசி புலம்புவேன்..நீ என்னையே புலம்ப 

விடுறியேனு மனசுக்குள்ளயே நினைத்தேன்..

அப்போ போன் ல பேச வேண்டியதுதானே..ஆமா..என் 

நம்பரை கூட ஞாபகம் வச்சிக்காம யார்னு 

தெரியலைன்னு சொன்னவ தானே நீ..?

நான் என்னடா பண்ணட்டும்..நானா எதுவும் 

சொல்லல..அண்ணன் தான் கேட்டாரு..யார் நம்பர் இது..

தினமும் இத்தனை மெசேஜ் வருதுன்னு..யாராவது 

பிரெண்டா இருக்கும்னு தான் சொன்னேன்..அவரா 

கம்ப்ளைன்ட் கொடுத்துட்டார்.. னு சொல்லி முடிக்கவும் 

அவ அப்பன் வந்துட்டான்.. மறுபடியும் துணி 

துவைக்க ஆரம்பிச்சுட்டா.. ( சனியனே..சீரியல் 

செட்டு போல வாங்கி குவிக்கிறியே டா.. ? )



அப்புறம் நான் கோயம்புத்தூர் வந்ததுக்கு அப்புறம்..

ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு 

போயிக்கிட்டு இருந்தேன்.. அப்படி ஒரு சண்டே 

காலையில ஒரு பச்சை கலர் சுடிதார் போட்டுக்கிட்டு 

வந்து நின்னா.. கணேஷ்..இந்த டிரஸ் எனக்கு நல்லா 

இருக்கானு கேட்டா.. உடனே நானோ..பொதுவா 

தேவதைகள் எல்லாம் வெள்ளை கவுன் தான் 

போட்டுக்கிட்டு வரும்னு படத்தில காட்டுவாங்க..

ஆனா இன்னைக்கு தான் தேவதை சில நேரங்களில்

பச்சை சுடிதார்லையும் வரும்னு தெரிஞ்சுகிட்டேன்னு

சொல்லவும் ச்சீ..போடா னு சொல்லிட்டு ஓடிட்டா.. 

( எவ்வளவு கேவலப்பட்டாலும் நீ திருந்த மாட்ட..

நீ திருந்த மாட்ட.. ) சிணுங்குறது எல்லாம் 

நல்லாத்தான் சிணுங்குறா ..ஆனா  ஒண்ணும் சரியா 

சிக்னல் தர மாட்றாளேனு ஒரு குழப்பம்.. ஆனா பெரிசா

பாதிக்கலை..அப்போ அவளை மடக்க நான் சின்சியரா

ட்ரை பண்ணலைன்னு சொல்றது தான் உண்மை.. 

இந்த சொல் பதத்திற்கு மன்னிக்கவும்..அன்றைய

காலக்கட்டத்தில் என் மன நிலை அப்படி 

தான் இருந்தது..



இப்படியே ஒரு வருஷம் எங்களுக்குள்ள என்ன 

இருக்குனு தெரியாமையே ஓடிக்கிட்டு இருந்துச்சு..

நான் வீட்டுக்கு போகும்போது எல்லாம் என் வீட்டுக்கு  

அடிக்கடி வருவா..எங்க அம்மாகிட்ட ரொம்ப நேரம் 

மொக்கை போடுவா.. என் வீட்டு வாசல்ல இருக்க

மாடிப்படியிலேயே உட்காந்து இருப்பா.. யாரும் 

இல்லைனா மட்டும் என் கூட பேசுவா.. பதிவு 

ரொம்ப நீளமா போறதால அவ கூட இருந்த பல 

சம்பவங்களை சொல்ல முடியல..சொல்லிக்கிற 

அளவுக்கும் ஒண்ணும் நடக்கல.. அதனால அப்படியே 

லூஸ் ல விடுவோம்.. அதுக்கு அப்புறம் கொஞ்ச 

நாளில் நாங்க பக்கத்து ஏரியா போயிட்டோம்..



இந்த ஏப்ரல் ல தான் கோர்சை கம்ப்ளீட் பண்ணா.. 

ஜாப் தேடிக்கிட்டு இருந்தா.. என் பிரெண்ட் ஒருத்தன்

TCS ல இருக்கான்.So அவன்கிட்ட ரெபெர் 

பண்ணலாம்னு அவ அண்ணன் கிட்ட சொல்லி 

அவ CV யை எனக்கு மெயில் அனுப்ப சொன்னேன்..

அனுப்பினா..நானும் பார்வர்ட் பண்ணிட்டேன்.. அதுல

இருந்து அவளோட மொபைல் நம்பரையும் மறக்காம

எடுத்துக்கிட்டேன்.. அதுக்கு  அப்புறம் ஒரு தடவை 

TCS ல இருந்து கால் வந்துச்சான்னு மெசேஜ் 

அனுப்பினேன்..இல்லப்பா னு ரிப்ளை வந்துச்சு..

சரி நான் அவன் கிட்ட கேட்குறேன் னு ரிப்ளை 

பண்ணினேன்.. அவ்வளவு தான்.. அதுக்கு அப்புறம் 

ஒரு நாள் சரக்கடிச்சு கிட்டு இருக்கும்போது தோனுச்சு.. 

ஹாய் ரே..நல்லா இருக்கியா..உனக்கு என் கூட 

பேசணும் னு தோணவே இல்லையா னு ஒரு 

மெசேஜ் அனுப்பினேன்..ரிப்ளை வரலை..



அதோட இருக்கு.. எனக்கும் அவ கிட்ட பேச தயக்கமா 

இருக்கு.. என்ன பேசுறதுனே தெரியலை.. 

இப்போவெல்லாம் மாசத்துக்கு ஒரு முறை 

சென்னை போறேன்..ஒவ்வொரு முறை ஊருக்கு 

போகும்போதும் அவ வீட்டைக் க்ராஸ் பண்ணித்தான்

போறேன்..அவளைப் பார்க்கணும்னு நினைத்து 

ஒவ்வொரு முறையும் பார்க்காமலையே திரும்புறேன்..



எது எப்படியோ ரேவதி.. நமக்குள்ள இருக்குறது 

என்னனு தெரியாமலையே இருக்கட்டும்.. இப்போ நான் 

வேற மாதிரி இருக்கேன்.. இப்படியே இருந்துடுறேன்..

உனக்காக இதுவரைக்கும் ஒரு 10 தடவைக்கு மேல நீ 

என் கிட்ட கேட்ட  TEMPTETION CHOCOLATE வாங்கி வச்சி 

இருந்து கொடுக்க முடியாம போச்சு.. 

அடுத்த தடவையாவது முடியுதானு பார்ப்போம்..






இது எழுதி முடிச்சி ரொம்ப நாள் ஆயிடுச்சு..

கடந்த நவம்பர் 12  ந் தேதி நம்பிக்கையே 

இல்லாம அவளுக்கு போன் பண்ணேன்..

ஆச்சர்யமா எடுத்து பேசினா..

அன்னைக்கு போட்ட ட்விட்ஸ் இதோ..

3 வருஷம் கழிச்சி இன்னைக்கு ஒரு தேவதை ஸ்திரீ கிட்ட பேசினேன்.. நாள் பூரா மகிழ்ச்சிக் கொள்ள வச்சிட்டா..

என்னை ஞாபகம் இருக்கானு கேட்டேன்..உன்னை எப்படிடா மறக்க முடியும் னு சொல்றா.
12 Nov Favorite Reply Delete 


எனக்கு உன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருந்துச்சுனு சொன்னேன்..என் கிட்ட பேச உனக்கென்ன தயக்கம்னு கேட்குறா..


நீ இவ்வளவு ப்ரீயா பேசுற..நான் தான் 3 வருஷத்தை வீனாக்கிட்டேனோனு கேட்டேன்..டே..திருட்டு ராஸ்கல்..என்னடா சொல்ல வர்றனு கேட்டா…
12 Nov Favorite Reply Delete 

ஒண்ணுமில்ல னு பழுப்பிட்டேன்..சிரிச்சுக்கிட்டே கொழுப்புடா உனக்குன்னு சொன்னா..


ஐயோ..முன்னர் போல இருந்து இருந்தா இன்னைக்கு சரக்கடிச்சு மட்டை ஆகி இருப்பேன்..ஹ்ம்ம்..நான் வேற சரக்கடிக்கிறதை குறைச்சுட்டேனே..
12 Nov Favorite Reply Delete


அதுக்கு அப்புறம் சில தடவை கால் பண்ணேன்..

அவ எடுக்கலை..மெசேஜுக்கும்  ரிப்ளை இல்ல..

கடந்த டிசம்பர் 5 ந் தேதி..மறுபடியும் அவளுக்கு போன் 

பண்ணினேன்..போன் எடுத்து ஹலோ சொல்லிட்டு அவ 


அண்ணனோ,இல்ல அப்பனோ தெரியலை..அவன்கிட்ட

கொடுத்துட்டா..நான் போதையில இருந்ததால குரல் 

அடையாளம் கண்டுபிடிக்க முடியலை.


அவன் யாருப்பா உனக்கு வேணும்..நீ யாரு எங்க இருந்து 

பேசுற னு கேட்கவும்..நான் உடனே அவ அண்ணன் பேரை

சொல்லி..ரமேஷ் இல்லையா அங்கிள் னு கேட்டேன்.. 

இது ரமேஷ் நம்பரா னு அவன் காண்டா கேட்க..

நான் சாரி அங்கிள்..தப்பா டயல் பண்ணிட்டேன் 

போலன்னு சொல்லிட்டு வச்சிட்டேன்..

ஒரு வாரம் கழிச்சி நான் சென்னை  போயி இருந்தப்போ , 

அவ வீட்டுக்கு போனேன்... 

நேர்ல பார்த்து பேசி பைசல் பண்ணிடலாம்னு..


கொய்யால...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட 

ஏதோ கல்யாணத்துக்கு போயிட்டாங்க..


அட வாத்சாயனா..நான் ஏன் இவ கிட்ட மட்டும் 

இவ்வளவு மொக்கை வாங்குறேன்...?

2 comments:

அக்கப்போரு said...

சே கஷ்டம்நு வந்ததும் வாத்ச்யாயணரக் கூப்ட பாரு. மனசுல நின்னுட்டீங்க பங்காளி. நீ நம்ம பயப்பா

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹா..ஹா..ஹா..என்ன பண்ணுறது..எல்லாம் அவன் செயல்..