Tuesday, January 3, 2012

ஏன் இப்படி ... 55

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






கொடுமை,கொடுமை னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே..

அது எதுக்கு பொருந்துதோ இல்லையோ பல நேரங்களில் 

ட்விட்டருக்கு பொருந்துது..SUGGESTIONS 

சொல்லியே சாவடிக்கிறாங்கப்பா..




நமக்குள்ள எவ்வளவு ஒத்துப்போகுதுன்னு ஆரம்பிக்கும் 

பல உறவுகள்..தனிப்பட்ட ரசனைக்கு மதிப்பு தராததாலையே 

பிரிஞ்சும் போயிடுது..




தெரியாத்தனமா ஏதாவது நல்லது செய்யும்போது ஒருத்தனும் 

பார்க்க மாட்றான்.சொன்னாலும் கேட்கமாட்றான் தப்பு 

செய்யும்போது எங்க இருந்து தான் வருவானுங்களோ..




வண்டியில போகும்போது திரும்பும் முன் இன்டிகேட்டர் 

போட சொன்னா..ஏரோபிக்ஸ்  எல்லாம் பண்றானுங்க..

#அட பைத்தியம் பிடிச்ச நாயிங்களா..




ADVANCE HAPPY WORLD AIDS DAY னு ஒரு மெசேஜ் வருது..

அட பரதேசி நாயிங்களா..# எந்த டே வந்தாலும் 

அதுக்கு வாழ்த்தா..?




கோவமே வராதவனுக்கு கூட பசிக்கிற நேரத்தில வேலை 

சொன்னா வெறி ஆகத்தான் செய்யும்னு ஏன் இந்த 

சீட்டு தேய்க்கிறவனுங்களுக்கு தெரியமாட்டுது ஆண்டவா..




கொங்கு மண்டல சாலைகளில் ஓடும் கார்களில் அதிகமா 

சொகுசு காரா போகுது..#என்னா யாவாரம் டா பண்றீங்க..




குடிச்சுட்டு புலம்புறவனைக் கூட மன்னிக்கலாம்..ஆனா 

குடிக்காமலேயே எப்போ பார்த்தாலும் புலம்புறவனை 

பொறுத்துக்கவே முடியாது..#நியூ இயர் சண்டே வந்தா நான் 

என்னடா பண்ணுவேன்..

 
என்னை விட 10 வயசு பெரிய பெண்ணை நான் அக்கானு

கூப்பிடுறேன்.ஆனா எட்டாவது படிக்கிற பொண்ணு என்னை 

அங்கிள்னு கூப்பிடுது..#முன் மண்டை முடி..அவ்வ்வ்...

 




ரீசன் கேட்டா ஆன் தி ஸ்பாட்ல அடுக்குறானுங்க..சொல்யூஷன் 

கேட்டா நீயே சொல்லு னு அந்தர் பல்டி அடிக்கிறானுங்க..

#ஏன்டா இப்படி..

No comments: