Wednesday, January 25, 2012

காதலைத் தேடி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஒவ்வொரு முறையும் உன்னை சந்தித்து பிரியும்போது , 

சந்தோஷத்தின் முடிவு என்றே எண்ணுகிறேன்..பின்பு உன் 

நினைவுகள் வந்து என்னை ஆக்கிரமிக்க அதுவே ஆரம்பம் 

என்பதை உணர்கிறேன்.




உன்னிடம் நான் ஊடல் கொண்டு உள்ளேன் என்பதை நான் 

கூறிய பிறகே உனக்கு தெரிகிறது..காதலை வெளிப்படுத்த 

தெரிந்த அளவிற்கு எனக்கு காயத்தை வெளிப்படுத்த

தெரியவில்லையோ…




என்னைக் காயப்படுத்தும் உன் வார்த்தைகளுக்கு மருந்து 

உன் புன்னகைகளும்,முத்தங்களும் மட்டுமே..காயங்களை 

தரும் நீ மருந்திட மறக்காதே..




நான் காயப்பட்டால் என்னை விடவும் அதிகம் துடிப்பவள் நீ..

இப்போது புரிகிறதா,நான் உன்னைக் கனவிலும்

காதலிப்பதற்கானக்காரணம்..




மற்றவர்களிடம் சற்றே கடுமையாகவும்,உன்னிடம் மட்டும்

மென்மையாகவும் நடந்து கொள்கிறேன் நான்..நீ அப்படியே 

எனக்கு நேரெதிர்..#போடி பம்ப்ளிமாஸ்..




என்னை சந்திக்க நீ காரணங்களை தேடுகிறாய்..ஆனால் ஹனி..

நானோ ஒவ்வொரு முறையும் காதலைத் தேடியே 

உன்னை சந்திக்கிறேன்..



சந்திப்பை நான் உண்டாக்கினால் சந்தோஷம் மட்டுமே 

மிஞ்சிய எனக்கு..நீ உருவாக்கிய சந்திப்பினால் திகைப்பும்,

திளைக்க திளைக்க மகிழ்ச்சியும்..லவ் யூடி ஹனி..




நேற்று முதன் முறையாக உன் கனவில் நான் வந்ததாக 

கூறி ஆச்சரியப்பட்டாய். ஹனி..என் கனவில் நீ வராவிட்டால் 

தான் எனக்கு அது ஆச்சர்யம்.




உன் நிலை உணர்ந்து என் காதலை மறைத்து நடிக்கிறேன் நான். 

நான் நடிப்பது தெரிந்து கள்ளச்சிரிப்புடன் என் காதலை 

தேடுகிறாய் நீ..#பம்ப்ளிமாஸ்..லவ் யூடி..


உண்மையானக் காதலை உணர வைத்தவளும் நீ தான்..

அதே காதலை வெறுக்க வைத்தவளும் நீ தான்..

No comments: