Saturday, July 16, 2011

" நீ " மட்டுமே..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




என்னை ஏன் உனக்கு பிடிச்சுருக்கு என்று ஓயாமல் கேட்பாய்..

நானும் சிரித்து மழுப்புவேன்..

உயிர் வாழ ஏன் சுவாசிக்கிறாய் என்பது 

போல இருப்பதால்..





குழந்தை போல எனக்காக அழுகிறாய் நீ..

எதற்காக என்பது எனக்கு தெரியும்..

அதை வார்த்தைகளில் கூற உன்னால் இயலவில்லை 

என்பதும் தெரியும்..




உன்னிடம் பிடித்தது இது தான் என்று ஒன்றை மட்டும் 

குறிப்பிட்டு சொல்வதானால்..

அது " நீ " மட்டுமே..





உன்னிடம் கோபப்படுவது போல நான் நடிப்பது..

சமாதானப்படுத்த முற்படும் என்னை முறைத்து நீ 

சிணுங்குவதை பார்க்கவே..




என் எழுத்தின் மீதே எனக்கு காதல் வர வைத்து விட்டாய்..

கவிதைகளை படித்து விட்டு நீ காட்டிய புன்னகையால்..