Saturday, July 9, 2011

உயிர்ப்பிக்கும் ஆக்ஸிஜன் நீ..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




இதோ உனக்கான பிறந்த நாள் பரிசு..

மன்னிப்பாயா என்னை... அத்தனைக்கும்.. 

அழும் உன் கண்ணீரை துடைக்கக்கூட கையாலாகாத 

எனக்கு கரங்கள் இருந்தென்ன பயன்..



விருப்பமில்லாமலேயே உன் தோழிகளுடன் 

நெருங்கி பழகுகிறேன்..

கோபத்தில் இருக்கும் உன்னை கொஞ்சுவதற்காக..






என் நெற்றியில் விபூதி இட்டு நீ ஊதிவிடுவாய்..

கருவறையில் கலவரம்..

உன் மூச்சுக்காற்றின் முக்கியத்துவம் தெரிந்து 

எனக்கு பின்னால் நிற்கிறார் கடவுள்..






காற்றுக்கு உருவமில்லையாம்..

என்னை உயிர்ப்பிக்கும் ஆக்ஸின் உன் உருவில்..






உனக்கு பிடித்த விஷயங்களை தெரிந்துகொள்ள 

நான் பகீரதபிரயத்தனப்படுகிறேன்..

உனக்கு அந்த கவலையே இல்லை..

எனக்கு பிடித்தது நீ மட்டும் தானே..




 




"அடி..வாங்குவ" என நீ சொல்லும் அழகுக்காகவே 

ஆயிரம் முறை உன்னை சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேனடி...

1 comment:

மயில் றெக்க said...

"அடி..வாங்குவ" என நீ சொல்லும் அழகுக்காகவே

ஆயிரம் முறை உன்னை சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேனடி...

நிறைய நடக்கு மச்சி