Wednesday, July 13, 2011

ஏன் இப்படி .... Part 25

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

நாம சொல்ற விஷயத்தை நாம யோசிக்காத ஒரு ஆங்கிளில் 

யோசிச்சு கேள்வி கேட்டு முழி பிதுங்க வைக்க பெண்களால 

மட்டுமே முடியும்..# முடியலைடா சாமி..






முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு 

ரைட் சைடுல போனா..நமக்கு பின்னால ஒருத்தன் 

வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்..

என்ன எழவுடா இது..





கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி 

அட்டென்ட் பண்ணி , அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா..

வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?






காதலிக்கிறவன் வருத்தப்படலாம்..ஆனா 

காதலிக்கப்படுறவன் என்னைக்குமே 

வருத்தமடைய மாட்டான்..






நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..

# சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே இதே 

ரோதனையா போச்சு...

எனக்கே புரியலை நான் சொன்னது..

No comments: