Tuesday, December 23, 2014

மாத்தி யோசி .. 79

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



"ஆ" படம் எப்படிடா இருக்குனு கேட்டான் ஒருத்தன்..

என் பொழப்பே "ஊ" னு  இருக்கு,ஏன்டா படத்தைப் பத்தி 

கேட்குறனு கடிச்சி வச்சிட்டேன்..



சீசனுக்கு சீசன் நல்லவன் வேஷம் போடுறவனை விட 

அயோக்கியனுங்க சவகாசமே தேவலாம்..

#சாமி சரணம்னு சாவடிக்கிறானுங்க..


முன்னெல்லாம் அரசியல் தலைவர்களை வரவேற்க பல 

பேனர் வைப்பாங்க..இப்போ ஒரே பேனரை பல இடத்தில் 

வைக்கிறாங்க..# கற்பனைப் பஞ்சம்..



ஜன்னல் மூடி இருந்தாலும் சாலையோர செடிகள்,

மரங்கள் வந்தா தலையை குனிஞ்சுக்கிறேன்..#அனிச்சை செயல்..



நம்ம ஊருல "ஒவ்வொரு குழிக்கும்" இடையில எவ்வளவு 

அழகா "ரோடு" போட்டு இருக்காங்க..!!! # மழைக்கால மெர்சல்கள்..

2 comments:

மகிழ்நிறை said...


சீசனுக்கு சீசன் நல்லவன் வேஷம் போடுறவனை விட

அயோக்கியனுங்க சவகாசமே தேவலாம்..

#சாமி சரணம்னு சாவடிக்கிறானுங்க..***
இனி எங்கே கருப்பு வேட்டிய பார்த்தாலும்,இந்த பன்ச் நினைவுக்கு வரும்:)))))ஏன் இந்த கொலைவெறி .prove i'm not a robot :((((( வந்ததது குத்தமா?? இல்ல கருத்துச்சொல்லுறது குத்தமா?

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹா ஹா ஹா.. சத்தியமா நான் ரோபோ லாம் இல்லைங்க.. அவ்வையார் பாடின அற்புதமான மனிதப்பிறவியில் ஒருத்தன் தான்