Thursday, March 26, 2015

மாத்தி யோசி .. 85

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஊருக்குள்ள பல "ஐ" வைரஸ் உலவுது..

அதாங்க "நான்" தான் எல்லாம்னு சொல்லிக்கிட்டு

திரிவானுங்களே அவனுங்களை சொல்றேன்..



லேடிகாகா வே பழசாயாச்சு.. மடோனா ஆல்பம்

ரிலீஸ் ஆகலையானு கேட்குறான் ஒருத்தன்..

# உங்க கூட எல்லாம் சகவாசம் வச்சா ஏன்டா 

என்னை 8 வது படிக்கிற பொண்ணு அங்கிள்னு கூப்பிடாது..???



பனியில பக்கத்துல இருக்குறவங்க பல்லைக் 

காட்டுறாங்களா இல்லையானு கூட தெரியலை..

# சிரிக்கலேன்னா சிடுமூஞ்சினு சொல்லிடுவாங்களே..



தினமும் ஆபிஸ் போகும்போது கசாப்பு கடைக்கு போற 

ஆடு போலவே போறேன்..

#இன்னைக்கு எவன்,எப்படி வெட்டப் போறானோ..!@#$%^&



பேய் பிசாசு எல்லாம் புடவைல தான் வருமான்னு

கேட்டான்..ஏன்டானு கேட்டா..எங்க எல்லா டீச்சரும் 

புடவைல தான் வர்றாங்கனு சொல்றான்..

#Good teachers.. Good students..

No comments: