Thursday, November 20, 2014

மாத்தி யோசி .. 76

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


லவ் பண்றவனிடம் கூட நட்பு வச்சுக்கலாம்..
 
ஆனா காலம் கடந்தும் இன்னும் கல்யாணம் ஆகாதவனுங்க 
 
கூட மட்டும் சகவாசமே வைக்கக்கூடாது..
 
#காது வலிக்க புலம்புறானுங்க



என் அண்ணனுக்கு(கஸின்) 3 வருஷமா பொண்ணு 
 
தேடுறாங்க..இப்போ வந்தவாசில ஒரு பொண்ணு 
 
இருக்குனு சொன்னாங்க..காட்டுவாசியா இருந்தாலும் 
 
ஓகே கட்டி வைங்கன்னு சொல்லிட்டேன்.. 



அவதார்ல வர்ற இக்ரானை கூட ஈஸியா மெயின்டைன் 
 
பண்ணிடலாம் போல..இந்த பொண்ணுங்களை மேய்க்கிறது 
 
கஷ்டம்டா சாமி..#எத்தனை கேள்வி கேட்குறாளுங்க..



எவன் தான் ஊழல் பண்ணலை,லஞ்சம் வாங்கலைன்னு 
 
நாமே சமாதானம் சொல்லிக்கிற அளவுக்கு கெட்டுப்போயி
 
இருக்கோம்..#சுஜாதா காலமாயிட்டார்..
 
ஷங்கர் மட்டும் போராடுனா போதுமா..? 
 
யோசிப்போம் மக்களே..



பாஸ் கிட்ட பேசும்போது நவரசங்கள் போக பாதரசத்தோட 

சேர்த்து பத்து ரசமும் காட்டுறானுங்க முகத்தில..

எங்கடா கத்துக்கிட்டீங்க இந்த வித்தையை..

# சொம்புகளின் சாகசங்கள்..