Tuesday, August 25, 2015

10 செகண்ட் கதைகள்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

3 மணி நேரம் போராடியும் தீயின் ஆரம்பப் புள்ளியை 

கண்டறிய இயலாதவர்களிடம் நான் சரியாய் 

அடையாளம் காட்டினேன்.. ஆம்.. நான் அங்கே தான் 

சிகரெட் துண்டினை வீசியிருந்தேன்...




9.40 க்கு வேகமாய் ஒன் வேயில் சென்ற என்னை 

மடக்காத காவலர்கள்.. 10.10 க்கு திரும்பி வந்த 

என்னை மடக்கி சொன்னனர்.. "ஊதுடா.."




5 வருடங்களாக உன்னிடம் சொல்லத் தயங்கிய 

என் காதலை.. நீயாகவே வந்து என்னிடம் 

சொன்னதும் எனக்குள் மணியடித்தது..

# ஆம்..கருமம் பிடித்த அலாரமே தான்..




பைக்கில் செல்லும்போது நீ கொடுத்த செல்போன் 

முத்தத்தால் நான் காற்றில் மிதப்பது போலவே 

ஒரு உணர்வு..ஆனால் என் உடம்பை சுத்தி ஏன் 

இவ்ளோ பேர் நிக்குறாங்க...




எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க..

ஏன்னே புரியலை.. கண்ணாடியில தெரியிறவனும் 

அதையே சொல்றான்.. பைத்தியக்காரன்...




பசிக்குதுனு  சொன்ன நண்பனிடம் என்ன 

சாப்பிடலாம்னு கேட்டேன்.. ப்ரைடு ரைஸ், சிக்கன் 

அதுக்கு முன்னாடி 2 பீர்னு சொல்றான்..




உன்னைக் காதலிக்க தொடங்கியபின் யாரும் 

என் கண்களுக்கு தெரிவதில்லை.. நீயும் தான்..

# எனக்கு தான் பார்வை இல்லையே..

2 comments:

மகிழ்நிறை said...

நல்ல முயற்சி! அதிலும் 1,2,4 செம!!! வாழ்த்துகள் சகோ!

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றி மைதிலி...