Saturday, April 28, 2012

மாத்தி யோசி ..61

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





நல்லவனா நடிப்பதை விட கெட்டவனா வாழ்ந்துட்டு 

போறது மிக சுலபம்..நிம்மதியும் கூட..

எந்த பயமும் இல்ல..








எல்லாரும் வருத்தத்தில் இருக்கும்போது நாம மட்டும் 

சந்தோஷமா இருக்கணும்னு நினைத்தா தான் அது தப்பு..

எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது நான் ஏன் 

வருத்தப்படணும்னு நினைக்கிறதில எந்த தப்பும் இல்ல..








ஆறுதல் சொல்லணும்னு நினைக்கிறவங்களை விட,

தங்களோட அதிமேதாவித்தனத்தைக் காட்டணும்னு 

நினைக்கிறவங்க தான் அதிகம்..# "நல்ல" பாம்புக்கும் 

விஷம் உண்டு மக்களே..உஷாரு..






நான் பொண்ணுங்க கிட்ட பொய் பேசுறது இல்ல..ஆனா 

உண்மையை மறைச்சிடுவேன்..பசங்க கிட்ட 

உண்மையை மறைக்கிறதில்லை..ஆனா நிறைய 

பொய் பேசுவேன்..








1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணுவது பெரிய 

விஷயம் இல்ல..அதுக்கு அப்புறம் தினம் தினம் பல 

பொய்கள் பேசிதான் வாழ்க்கையை ஓட்டணும்..

அது தான் முக்கியம்..





செஸ்,செக்ஸ் - இரண்டிலுமே ராணி இல்லைனா ராஜா 

பாடு திண்டாட்டம் தான்..#விளையாட்டோ,வாழ்க்கையோ 

பெண்கள் ரொம்ப முக்கியம் பசங்களா…






ஒருத்தி மேல மட்டும் உயிரை வச்சிட்டு பிணமா 

வாழ்வதை விட,ஜில்பான்சி சாமியாரா மாறி 

ஜில்லிப்பு தட்டிக்கிட்டு சல்லாபிக்கலாம் போல..






தப்பு செய்பவனை விட,அதுக்கு தூண்டுதலா இருந்தவன் 

தான் குற்றவாளி எனில்..ஒருத்தன் அவனை கொலை 

செய்யும்படி என்னை தூண்டினா அவன் தானே குற்றவாளி..

#பாஸுக்கு ஒரு பன்னிவெடி பார்சல்..








சந்தோஷப்பட எதுவுமே இல்லைன்னு வருத்தப்படுறவங்களே..

வருத்தப்பட எதுவுமே இல்லைன்னு நினைத்து

சந்தோஷப்படுங்களேன்.#இருப்பது ஒரே வாழ்க்கைதான்





எதிரிகள் எப்போதுமே நம்மை பார்த்து பொறாமை படுவதில்லை..

ஆனா என்ன நாம தான் எதிரிகள் யாருன்னு அடையாளம் 

தெரியாம திண்டாடுறோம்..#நல்லவன் வேஷம் 

போட்டே ஊரை ஏமாத்துறானுங்கப்பா..என்னா பெர்பார்மன்ஸ்..



No comments: