முல்லை
மருதம்
நெய்தல்
பாலை னு ஐந்து வகையா பிரிக்கலாம்...
ஆனா இது எதுலயும் சேராம ஆறாவது
வகையான நிலம் ஒண்ணு இருக்குது...
அது காதலும் , காதல் சார்ந்த இடமும்...
நான் அதுல தான் வாழ்ந்துகிட்டு
இருக்கேன்...
இறைவனோ இல்ல இயற்கையோ...
ஆணையும் பெண்ணையும் வெவ்வேறா
படைச்சதே காதலிக்க தான்னு
நம்புறவன் நான்...
காதலிக்கிறவங்களும் ...
காதலிக்க படுறவங்களும்
கடவுளால ஆசிர்வதிக்க பட்டவங்க...
காதலிச்சு பாருங்க..
அப்பத்தான் அத உணர முடியும்....
குழல் இனிது..
யாழ் இனிது என்பர்..
தம் காதலி கொஞ்சல் மொழி கேளாதவர்...
( எப்படி இருக்கு என் புது மொழி...)
ஆதலினால் ஒரு காதல் செய்வீர்...
உங்களுக்கு பிடிச்சு இருக்கோ
இல்லையோ என் கவிதையை படிச்சி
தான் ஆகணும்....அது உங்க விதி...
கீழே விழாத தஞ்சை கோபுரத்தின்
நிழல் மட்டும் அதிசயம் அல்ல...
கீழே விழும் உன் நிழலும்
அதிசயம் தான்...
என்றும் காதலுடன்...
உங்கள் கணேஷ்....













