Showing posts with label ஜில் ஜொள் டல் அனுபவங்கள். Show all posts
Showing posts with label ஜில் ஜொள் டல் அனுபவங்கள். Show all posts

Saturday, April 25, 2015

மஞ்சூர் மலைப் பயணம் - மஜாவான மரண பயம்



உயிரைக் கையில பிடிச்சிகிட்டு ஒரு மலைப் பயணம்

முடிச்சு வந்தாச்சு..#படுகாஸ் டான்ஸ் ஆடி பாதம்

வீங்கி போச்சு..



காட்டுயானை கூட செல்ஃபி எடுக்கணும்னு சொன்னான் 

ஒருத்தன் .. பொணத்துக்கு எவனும் பொண்ணு தர 

மாட்டான்னு சொன்னதும் வேணாம்னுட்டான்..



டைல்ஸ் போட்ட பாத்ரூம் பார்த்திருக்கேன்.. யானைகளுக்கு 

தார் போட்ட பாத்ரூம் இப்போ தான் பார்த்தேன்..

#கூட்டத்துக்கே பேதி போல..ரோடெங்கும் சாணம்..



6 மணிக்கு மேல அனுமதிக்க மாட்டோம்னு சொன்னவங்க 

அமவுண்ட் கொடுத்ததும் போக விட்டானுங்க..

#அடேய் ஆஃபிசருங்களா இப்போ மட்டும் யானை வராதாடா..???



மலைப்பாதையில பைக்ல போனதுக்கு வண்டி ஸ்பேர் 

பார்ட்ஸும் எங்க ஸ்பேர் பார்ட்ஸும் இடம் மாறி 

பழுதானது தான் மிச்சம்..# "பம்பர் குலுக்கல்கள்"..



எலிஃபன்ட்ஸ் க்ராஸ் ஆனா ஹெட்லைட் ஆஃப் பண்ணிட்டு

சைலென்ட்டா இருங்க..#"தமிழ்நாடு" வனத்துறை..

(உங்க ஆங்கிலப் புலமையைக் காட்ட நாங்களா கிடைச்சோம்..)



வண்டி ஓட்டும்போது செல்போன் எடுக்குறதே தப்பு..

இதுல செல்பி வேற எடுக்குறானுங்க..#அடேய்..

அரைகுறை ஆர்வக்கோளாறுகளா அடங்கமாட்டீங்களாடா...



புகை சிகரெட்டுல இருந்து வருதா இல்ல ஜீவனில் இருந்து

வருதானே தெரியலை..#உயிரைக் குடிக்கும் பனி..

மஞ்சூர் மரண பயம் காட்டிடுச்சு..



சென்னையில வெயில் ஊசி போல குத்தினா  அங்க

பனி குத்துது..#இங்க குளிரினாலே எழுந்திரிக்க முடியலை.. 

அங்க தூங்க முடியலை..



6.30 மணிக்கு எழுந்து அந்தக் குளிரில குளிச்சக் கொடுமையை 

கம்பேர் பண்ணா இன்னும் எவ்ளோ கஸ்டமர் கம்ப்ளைன்ட்ஸ்

வந்தாலும் சமாளிக்கலாம் 



ஹீட்டர் ல வர்ற தண்ணி சூட்டை விட உச்சா 

சூடா வருது..அவ்வவ் அதுல குளிக்க முடியாதே..



இன்னும் எத்தனை நாளைக்கு தான் பசங்க கூடவே 

படுத்து தூங்கணும்னு தெரியலை..#சத்திய சோதனை..



நல்லவேளையா ஒரு பேங்க் GM வீட்டுல தங்கவச்சாங்க.. 

லாட்ஜுக்கு நான் போகலை..#கூட வந்தவனெல்லாம் 

மொடாக் குடிகாரனுங்க..BAD BOYS  



வடை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள டீ ஆறிப்போச்சு..

# பனியோட சனியும் சேர்ந்துக்குது..#பாய்லர்லயா

வாய் வச்சி குடிக்க முடியும்..???



கோவிலுக்கு போலாம்னு சொன்னவங்களை நம்பி போனா..

சாமி கும்பிடாம செல்ஃபி எடுக்குறானுங்க.. அடேய்..

ஆண்டவனையே அப்டேட் பண்ண வச்சிடுவீங்க போலேயே...



மலை மேல ஆக்சிஜன் தான் பற்றாக்குறை..

ஆல்கஹால் பற்றாக்குறையே இல்லை..

# அவ்வளவும் கர்நாடகா இறக்குமதி.. எத்தனை மூட்டை..!!!!



ஸ்டார்ட் மியூசிக்..காந்தக் கண்ணழகி.. லெஃப்ட்ல பூசு.. 

தோ பார்.. ரைட்ல பூசு னு  நைட்டு 12 மணி வரை ஆட்டம்..

# அந்த ராத்திரியில சோறு குழம்பு வடிச்சிப் போட்ட அன்பு 

உள்ளங்களை என்னனு சொல்றது..# இவங்க எல்லாம் 

ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்..



கால்கள் ரெண்டும் அந்த ஆட்டம் ஆடுச்சு..

அது குளிரினாலையா,குடிச்சதாலையா இல்ல குத்தாட்டம் 

ஆடவானு தெரியலை..



படுகாஸ் டான்ஸ் கூட சேர்த்து கண்ணம்மாபேட்டை 

குத்தையும்,பேட்டா ராப்பையும் கலந்து அடிச்சி

# கால் வீங்கி போச்சுப்பா!@#$%^&*



பாட்ஷா படத்துல தலைவர் சொல்ற மாதிரி "நான் ஆடி 

நீ பார்த்திருக்கியானு",ஆடாதவங்களை எல்லாம் 

ஆட வச்சிட்டாங்க..# என்னா பீட்டு..!!!!!



சிட்டில கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க வர்ற மாதிரி 

காலை 9 மணிக்கு சூரியன் வந்து 10.30 மணிக்கெல்லாம் 

போயிடுச்சு..# பகல் 12.30 மணிக்கு மேல பனி இறங்கி

மலையையே மறைச்சிடுச்சு..ஹ்ம்ம்ம்ம்...




இப்பவும் மலை,கடல்,ரயில்,விமானம்,யானை எல்லாம் 

பார்க்க அவ்ளோ பரவசமா இருக்கு..#ஆனா யானையை 

காட்டுல பார்க்க மட்டும் செம டர்ரா இருக்கு..



பசியை விடக் கொடுமையானது பந்தியில உக்கார 

காத்திருக்குறது தான்..#ஒருத்தன் உட்காந்தா ஊருக்கே

இடம் பிடிக்கிறான்.. சமைக்கிற இடத்துக்கே போகலாமோனு

யோசிக்க வச்சிட்டாங்க..



சரக்கடிக்கவும்,சாப்பிடவும் பசங்க எவனுக்கும் 

காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும்

முந்து.. முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!! 



என்னதான் உடம்பு வலி இருந்தாலும் இன்னும் 

ஆறு மாசத்துக்கு தேவையான உற்சாகம் வந்துடுச்சு..

# நன்றி மக்களே..!!!!

Tuesday, March 27, 2012

அப்ரைசல் பூதம்.. நெருங்கி வருது..




எல்லா கம்பெனிகளிலும் இன்னும் ஒரு மாசத்துக்கு களேபரம் தான்..

இனிமே டாஸ்மாக்ல இன்னும் கல்லா கட்டும்.. எப்படியும் 

எதிர்பார்க்கிறதை விட கம்மியா தான் அப்ரைசல் போடுவானுங்க...

அது எப்படி தான் வருஷம் பூரா வேலையே பார்க்காம அப்ரைசல் 

பீரியட் ல மட்டும் எதிர்பார்ப்பானுங்களோ தெரியல..

சரி..இனி அப்படியே கொஞ்சம் வேகமா,சுருக்கமா 

என்னோட புலம்பல்கள்..







PERFORMANCE APPRAISAL..போடப்போற நாமத்துக்கு

புதுப்பெயர்..போங்கடா புண்ணாக்கு ரங்கனுன்களா..




நாங்கள் அப்படி செய்தோம்..நாங்கள் இப்படி செய்தோம் னு

அரசியல்வாதிகள் போல அறிக்கை கொடுக்க சொல்றானுங்க..

# ஏதாவது செய்திருந்தா தானே டா சொல்ல முடியும்..?




சிகரெட்,சரக்கு விலை எல்லாம் எழுதி வச்சி…எல்லாமே விலை 

ஏறி போச்சு…தயவு செய்து சம்பள உயர்வு கொடுங்க சாமின்னு 

ரெண்டு ஸ்மைலி போட்டுடவா..?






எனக்கு உண்மை தான் பேச வராது…பொய் எல்லாம் நல்லா கதை 

அடிச்சி விடுவேன்..ஆனா படிக்கிற என் பாஸ் க்கு 

நெஞ்சுவலி வந்துடுமேனு பார்க்க வேண்டியதா இருக்கு…

என்ன பண்ணலாம்..?






வருஷம் பூரா வீக் எண்டு னு கூட பார்க்காம வேலை

செஞ்சிருக்கேன்டா..உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல 

கொத்தடிமை கிடைக்க மாட்டான்டா னு HR கு 

மெயில் அனுப்பலாமா..?






இந்த அப்ரைசல் போடுற வரைக்கும் ஒரு மாசம் நமக்கு 

கீழ இருக்குறவங்களை வேலை வாங்குவது உண்மையிலேயே 

ரொம்ப கஷ்டம்..# சாணி அப்பின மாதிரியே மூஞ்சிய 

வச்சிக்கிட்டு திரியுறானுங்க..






என் பாஸ் க்கு அந்த பிரச்சினையே இல்ல..நான் தான் வருஷம் பூரா,

ஜட்டியில உச்சா போன குழந்தை போல ஒரே ரியாக்ஷன்

கொடுக்குறேனே..






அப்ரைசல் போட்டு முடிஞ்சதும் இந்த பாஸ் எல்லாம் வந்து 

ஆறுதல் சொல்லுவானுங்க பாருங்க..பாவம்..நம்ம பக்கமும் 

பேச முடியாம,மேனேஜ்மென்ட் பக்கமும் பேச முடியாம..

#பரிதாப ஜீவன்கள்..






ஒரு வருஷமா உண்டான காண்டை காட்டுவதற்கு சரியான 

நேரம் அப்ரைசல் போட்டதுக்கு அப்புறம் வரும் நாட்கள் தான்..

காலில் விழாத குறையா கெஞ்சினாலும் வேலை செய்யவே 

தேவை இல்லை..






அப்ரைசலுக்கு ஒரு மாசம் முன்னால ஆபிஸ்ல 

இருக்குறவனுங்களைப்    பார்க்கணுமே..அதுவரைக்கும் 

பிகர் கூட நடப்பது போல போனவனெல்லாம்,பீக் அவர் ல 

போறது போல பறப்பானுங்க..






அப்ரைசலுக்கு முன்னாடி , அவனவன் வேலையவே 

அரைகுறையா செய்யும் அப்பாடக்கர் எல்லாம் இந்த ஒரு 

மாசம் மட்டும் வாலண்டியரா வேலையைக் கேட்டு கேட்டு 

வேற ஒருத்தன் கிட்ட கொடுத்து செய்வானுங்க..

#ஏண்டா இந்த மானங்கெட்ட பொழப்பு...





ஆபிஸ் டைம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷம் ஓடி போகும்

நாயெல்லாம்..பொறுப்பு வந்த பருப்பு போல படம் 

போடுவானுங்க பாருங்க..அப்படியே பத்திக்கிட்டு வரும்..

#வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லைன்னு 

ஆபிஸ்ல இருக்குறவங்க இந்த லிஸ்டில சேர மாட்டாங்க..






அப்படி பத்து மணி வரைக்கும் இருந்து என்னடா 

பண்ணினான்னு பார்த்தா , காலையில செய்ய வேண்டிய 

வேலை எல்லாம் சனியன் சாயங்காலம் தான் 

செஞ்சி இருக்கும்..அதையும் தூக்க கலக்கத்தில 

தப்பு தப்பா..






இன்க்ரிமென்ட்  கம்மியா இருக்குது இல்லை , நான் 

இவ்வளவு எதிர்பார்க்கிறேன்னு நம்ம பாஸ் கிட்ட 

சொல்லபோகும்போது தான் அவரு நமக்காகவே காத்துக்கிட்டு 

இருந்து நாம இன்னும் நிறைய இம்ப்ரூவ்மென்ட் 

பண்ணனும் னு சொல்வாரு பாருங்க..

சரக்கு வாங்க காசில்லைன்னு நாம சொல்லும்போது 

க்ளாஸ் கழுவவே இல்லைன்னு சொன்னா ஒரு 

எரிச்சல் வரும் பாருங்க...அப்படி இருக்கும்...





நாமம் போட்டுட்டானுங்களேனு  நாமே கடுப்பில இருப்போம்..

சும்மாவே சொம்படிச்சி சம்பளம் வாங்கும் சப்பை எல்லாம் 

வந்து ச்ச..இவ்வளவு நாள் வேலை செஞ்சதுக்கு பலனே 

இல்லை மச்சி..நம்மளை ஏமாத்திட்டாங்கன்னு 

சொல்வானுங்க பாருங்க..அதை தான் தாங்கவே  முடியாது..


செம காண்டுடன்...கண்ணீரும் கம்பலையுமாக...

3G ...

Friday, January 13, 2012

செப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன சோக ஸ்டோரி.. 2



அட.ச்ச..எப்பவுமே நான் கூட படிக்கிற 

பொண்ணுங்களையும், வீட்டு பக்கத்திலையும்,அதுக்கு 

அப்புறம் வேலை செய்யுற இடத்திலையும் 

பொண்ணுங்களை பார்க்கவோ,பேசவோ மாட்டேன்..

சீக்கிரம் விஷயம் வெளிய தெரிஞ்சுடும்னு.. 

ட்ரான்ஸ்போர்ட்டர்  படத்தில JASON STATHEM ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி மாட்டிக்கிட்டது போல என் ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி நான் மாட்டிக்கிட்டேனே..

( ENGLISH படம் பார்க்குறாறாம் .. ) இந்த முடிக்கு 

தான் இதெல்லாம் வேணாம்னு ஒதுங்கி இருக்க 

ஆரம்பிச்சேன்.. ஆனா அவ அதுக்கு அப்புறம் தான் 

ஓவரா புழிய ஆரம்பிச்சா ..பீலிங்க்சை..



நான் கொய்யா மரத்தடியில உட்காந்துகிட்டு பசங்க கூட 

போன் ல பேசுறது வழக்கம்.. இவ துணி துவச்சுக்கிட்டு

இருந்தா..நான் கண்டுக்கலை..அவளே கேட்டா..

ஏன் கணேஷ்..நாம சின்னவயசுல எவ்வளவு ஜாலியா

விளையாடினோம் ல..எதை பத்தியும்,யாரை பத்தியும்

கவலை இல்ல..ஹ்ம்ம்..இப்போ நெனச்சு பார்த்தா கூட

சந்தோஷமா இருக்கு.. அப்படியே இருந்து இருக்கலாம்..

உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒரு நாள் நாம ரெண்டு 

பேரும் மொட்டை மாடியில இருட்டுல உட்காந்து 

காலையில 3 மணி வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தது..

அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச நீல ஷர்ட் போட்டு இருந்த..

எனக்கு ஒரு எழவும் ஞாபகம் இல்ல.. ஆமாண்டி..இதை 

எல்லாம் நல்லா எழவு கொட்டு..ஆனா போலீஸ் ல 

போட்டு கொடுத்துடு நெனச்சுகிட்டு..

உனக்கு எல்லா ஞாபகம் இருக்கு போல..இப்போ 

மட்டும் என்ன ப்ராப்ளம்..பேச வேண்டியது தானே..

அது எப்படி முடியும்..யாராவது தப்பா நெனச்சா..

என்னனு 

எதோ ஒண்ணுனு..அதனால தான் நான் உன்கிட்ட 

சரியா பேசுறதே இல்ல..ஆனா உன் கூட பேசணும் 

போல இருக்கும் தெரியுமா..?



அடிப்பாவி..பொதுவா நான் தானே இப்படி எல்லாம் 

புரியாம பேசி புலம்புவேன்..நீ என்னையே புலம்ப 

விடுறியேனு மனசுக்குள்ளயே நினைத்தேன்..

அப்போ போன் ல பேச வேண்டியதுதானே..ஆமா..என் 

நம்பரை கூட ஞாபகம் வச்சிக்காம யார்னு 

தெரியலைன்னு சொன்னவ தானே நீ..?

நான் என்னடா பண்ணட்டும்..நானா எதுவும் 

சொல்லல..அண்ணன் தான் கேட்டாரு..யார் நம்பர் இது..

தினமும் இத்தனை மெசேஜ் வருதுன்னு..யாராவது 

பிரெண்டா இருக்கும்னு தான் சொன்னேன்..அவரா 

கம்ப்ளைன்ட் கொடுத்துட்டார்.. னு சொல்லி முடிக்கவும் 

அவ அப்பன் வந்துட்டான்.. மறுபடியும் துணி 

துவைக்க ஆரம்பிச்சுட்டா.. ( சனியனே..சீரியல் 

செட்டு போல வாங்கி குவிக்கிறியே டா.. ? )



அப்புறம் நான் கோயம்புத்தூர் வந்ததுக்கு அப்புறம்..

ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு 

போயிக்கிட்டு இருந்தேன்.. அப்படி ஒரு சண்டே 

காலையில ஒரு பச்சை கலர் சுடிதார் போட்டுக்கிட்டு 

வந்து நின்னா.. கணேஷ்..இந்த டிரஸ் எனக்கு நல்லா 

இருக்கானு கேட்டா.. உடனே நானோ..பொதுவா 

தேவதைகள் எல்லாம் வெள்ளை கவுன் தான் 

போட்டுக்கிட்டு வரும்னு படத்தில காட்டுவாங்க..

ஆனா இன்னைக்கு தான் தேவதை சில நேரங்களில்

பச்சை சுடிதார்லையும் வரும்னு தெரிஞ்சுகிட்டேன்னு

சொல்லவும் ச்சீ..போடா னு சொல்லிட்டு ஓடிட்டா.. 

( எவ்வளவு கேவலப்பட்டாலும் நீ திருந்த மாட்ட..

நீ திருந்த மாட்ட.. ) சிணுங்குறது எல்லாம் 

நல்லாத்தான் சிணுங்குறா ..ஆனா  ஒண்ணும் சரியா 

சிக்னல் தர மாட்றாளேனு ஒரு குழப்பம்.. ஆனா பெரிசா

பாதிக்கலை..அப்போ அவளை மடக்க நான் சின்சியரா

ட்ரை பண்ணலைன்னு சொல்றது தான் உண்மை.. 

இந்த சொல் பதத்திற்கு மன்னிக்கவும்..அன்றைய

காலக்கட்டத்தில் என் மன நிலை அப்படி 

தான் இருந்தது..



இப்படியே ஒரு வருஷம் எங்களுக்குள்ள என்ன 

இருக்குனு தெரியாமையே ஓடிக்கிட்டு இருந்துச்சு..

நான் வீட்டுக்கு போகும்போது எல்லாம் என் வீட்டுக்கு  

அடிக்கடி வருவா..எங்க அம்மாகிட்ட ரொம்ப நேரம் 

மொக்கை போடுவா.. என் வீட்டு வாசல்ல இருக்க

மாடிப்படியிலேயே உட்காந்து இருப்பா.. யாரும் 

இல்லைனா மட்டும் என் கூட பேசுவா.. பதிவு 

ரொம்ப நீளமா போறதால அவ கூட இருந்த பல 

சம்பவங்களை சொல்ல முடியல..சொல்லிக்கிற 

அளவுக்கும் ஒண்ணும் நடக்கல.. அதனால அப்படியே 

லூஸ் ல விடுவோம்.. அதுக்கு அப்புறம் கொஞ்ச 

நாளில் நாங்க பக்கத்து ஏரியா போயிட்டோம்..



இந்த ஏப்ரல் ல தான் கோர்சை கம்ப்ளீட் பண்ணா.. 

ஜாப் தேடிக்கிட்டு இருந்தா.. என் பிரெண்ட் ஒருத்தன்

TCS ல இருக்கான்.So அவன்கிட்ட ரெபெர் 

பண்ணலாம்னு அவ அண்ணன் கிட்ட சொல்லி 

அவ CV யை எனக்கு மெயில் அனுப்ப சொன்னேன்..

அனுப்பினா..நானும் பார்வர்ட் பண்ணிட்டேன்.. அதுல

இருந்து அவளோட மொபைல் நம்பரையும் மறக்காம

எடுத்துக்கிட்டேன்.. அதுக்கு  அப்புறம் ஒரு தடவை 

TCS ல இருந்து கால் வந்துச்சான்னு மெசேஜ் 

அனுப்பினேன்..இல்லப்பா னு ரிப்ளை வந்துச்சு..

சரி நான் அவன் கிட்ட கேட்குறேன் னு ரிப்ளை 

பண்ணினேன்.. அவ்வளவு தான்.. அதுக்கு அப்புறம் 

ஒரு நாள் சரக்கடிச்சு கிட்டு இருக்கும்போது தோனுச்சு.. 

ஹாய் ரே..நல்லா இருக்கியா..உனக்கு என் கூட 

பேசணும் னு தோணவே இல்லையா னு ஒரு 

மெசேஜ் அனுப்பினேன்..ரிப்ளை வரலை..



அதோட இருக்கு.. எனக்கும் அவ கிட்ட பேச தயக்கமா 

இருக்கு.. என்ன பேசுறதுனே தெரியலை.. 

இப்போவெல்லாம் மாசத்துக்கு ஒரு முறை 

சென்னை போறேன்..ஒவ்வொரு முறை ஊருக்கு 

போகும்போதும் அவ வீட்டைக் க்ராஸ் பண்ணித்தான்

போறேன்..அவளைப் பார்க்கணும்னு நினைத்து 

ஒவ்வொரு முறையும் பார்க்காமலையே திரும்புறேன்..



எது எப்படியோ ரேவதி.. நமக்குள்ள இருக்குறது 

என்னனு தெரியாமலையே இருக்கட்டும்.. இப்போ நான் 

வேற மாதிரி இருக்கேன்.. இப்படியே இருந்துடுறேன்..

உனக்காக இதுவரைக்கும் ஒரு 10 தடவைக்கு மேல நீ 

என் கிட்ட கேட்ட  TEMPTETION CHOCOLATE வாங்கி வச்சி 

இருந்து கொடுக்க முடியாம போச்சு.. 

அடுத்த தடவையாவது முடியுதானு பார்ப்போம்..






இது எழுதி முடிச்சி ரொம்ப நாள் ஆயிடுச்சு..

கடந்த நவம்பர் 12  ந் தேதி நம்பிக்கையே 

இல்லாம அவளுக்கு போன் பண்ணேன்..

ஆச்சர்யமா எடுத்து பேசினா..

அன்னைக்கு போட்ட ட்விட்ஸ் இதோ..

3 வருஷம் கழிச்சி இன்னைக்கு ஒரு தேவதை ஸ்திரீ கிட்ட பேசினேன்.. நாள் பூரா மகிழ்ச்சிக் கொள்ள வச்சிட்டா..

என்னை ஞாபகம் இருக்கானு கேட்டேன்..உன்னை எப்படிடா மறக்க முடியும் னு சொல்றா.
12 Nov Favorite Reply Delete 


எனக்கு உன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருந்துச்சுனு சொன்னேன்..என் கிட்ட பேச உனக்கென்ன தயக்கம்னு கேட்குறா..


நீ இவ்வளவு ப்ரீயா பேசுற..நான் தான் 3 வருஷத்தை வீனாக்கிட்டேனோனு கேட்டேன்..டே..திருட்டு ராஸ்கல்..என்னடா சொல்ல வர்றனு கேட்டா…
12 Nov Favorite Reply Delete 

ஒண்ணுமில்ல னு பழுப்பிட்டேன்..சிரிச்சுக்கிட்டே கொழுப்புடா உனக்குன்னு சொன்னா..


ஐயோ..முன்னர் போல இருந்து இருந்தா இன்னைக்கு சரக்கடிச்சு மட்டை ஆகி இருப்பேன்..ஹ்ம்ம்..நான் வேற சரக்கடிக்கிறதை குறைச்சுட்டேனே..
12 Nov Favorite Reply Delete


அதுக்கு அப்புறம் சில தடவை கால் பண்ணேன்..

அவ எடுக்கலை..மெசேஜுக்கும்  ரிப்ளை இல்ல..

கடந்த டிசம்பர் 5 ந் தேதி..மறுபடியும் அவளுக்கு போன் 

பண்ணினேன்..போன் எடுத்து ஹலோ சொல்லிட்டு அவ 


அண்ணனோ,இல்ல அப்பனோ தெரியலை..அவன்கிட்ட

கொடுத்துட்டா..நான் போதையில இருந்ததால குரல் 

அடையாளம் கண்டுபிடிக்க முடியலை.


அவன் யாருப்பா உனக்கு வேணும்..நீ யாரு எங்க இருந்து 

பேசுற னு கேட்கவும்..நான் உடனே அவ அண்ணன் பேரை

சொல்லி..ரமேஷ் இல்லையா அங்கிள் னு கேட்டேன்.. 

இது ரமேஷ் நம்பரா னு அவன் காண்டா கேட்க..

நான் சாரி அங்கிள்..தப்பா டயல் பண்ணிட்டேன் 

போலன்னு சொல்லிட்டு வச்சிட்டேன்..

ஒரு வாரம் கழிச்சி நான் சென்னை  போயி இருந்தப்போ , 

அவ வீட்டுக்கு போனேன்... 

நேர்ல பார்த்து பேசி பைசல் பண்ணிடலாம்னு..


கொய்யால...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட 

ஏதோ கல்யாணத்துக்கு போயிட்டாங்க..


அட வாத்சாயனா..நான் ஏன் இவ கிட்ட மட்டும் 

இவ்வளவு மொக்கை வாங்குறேன்...?

Monday, December 26, 2011

செப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன சோக ஸ்டோரி.. 1




ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும்

காதலிக்கிறது இயல்பு.. 

ஆனா நான் அந்த காதலையே காதலிக்கிறேன்..




என் வாழ்க்கை வரலாறை யாராவது மதிக்கலைன்னு

தெரியுது..இருந்தாலும் நான் தொடர்ந்து எழுதுறேன்..

( ஆமா ராசா..நீ நாட்டு விடுதலைக்காக செக்கிழுத்ததையும்

சிறைக்கு போனதையும் பத்தி எழுதுற..நாயே நீ ஜொள்ளு

விட்டதையும் , சைட் அடிச்சி செருப்படி வாங்குனதையும்

எழுதிட்டு வேற என்னடா எதிர் பார்க்குற..)



நான் இந்த புது ஏரியா வுக்கு வந்து நல்லா 

பழகினவங்கள் ல தேவி அக்காவும் ஒருத்தவங்க.. 

அவங்களோட தம்பி ரமேஷ்..என் வயசு தான்.. 

அதனால அடிக்கடி அவன் வீட்டில தான் இருப்பேன்.. 

அவ தான் கடைசி.. ரேவதி.. என் வீட்டுல இருந்து 

ரெண்டு வீடு தள்ளி தான் அவ வீடு.. 




எனக்கு அப்போ 13 வயசு..அவளுக்கு 11.. 

( பிஞ்சில பழுத்த பாவி..) அப்போவெல்லாம் அவ 

என்னை பேர் சொல்லி கூப்பிடுவா.. அவ கூட சண்டை

போட்டு இருக்கேன்..என்னை அண்ணா னு தான்

கூப்பிடனும்..பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு..

( எங்க..இப்ப சொல்லேன் பார்ப்போம்..) ஆரம்பத்தில 

எல்லாம் அவ மேல எனக்கு அந்த அளவுக்கு ஈடுபாடு 

இல்ல.. அப்படியே ஸ்கூல் முடிஞ்சு , காலேஜ் 

சேர்ந்ததுக்கு அப்புறம் அனிதா , அமுதா , பாத்திமா னு

ட்ராக் மாறி போனதுல இவளை கண்டுக்கவே இல்ல..




ஸ்கூல் படிக்கும்போது எல்லாம் அவ வீட்டில தான் நாங்க 

4 பேரும் SHUTTLE CORK விளையாடுவோம்.. அப்போ கூட அவ

என் டீம் வந்தா சண்டைதான்.. ( நீயும் ஊடலில் தொடங்கும்

காதல் னு ஆரம்பிப்பியோ..) அப்புறம் அவ பெரிய 

பொண்ணா ஆனதும் அவங்க வீட்டுக்கு போறதை 

நான் குறைச்சுகிட்டேன்.. ( நீயா போகலையா.. இல்ல 

உன் வீட்டிலையும் , அவ வீட்டுலையும் போக 

கூடாதுன்னு பின்னி எடுத்தாங்களா..) கொஞ்ச நாள் 

அவ வேற அவங்க சொந்தக்காரங்க வீட்டில 

தங்கி படிச்சா..அதனால அவ நினைவே இல்ல.. 




இப்படி இருக்கையில,பழைய ஹவுஸ் ஓனர் வீட்டை 

வித்ததால நாங்க அவ வீட்டுக்கு குடிபோனோம்..

அதுவரைக்கும் 4 மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு 

வந்து போன நான் 2 மாசத்துக்கு ஒருமுறை வந்து 

போக ஆரம்பிச்சேன்.. ( அதான்..பிகர் பக்கத்தில 

இருக்கே..எப்படி உனக்கு அங்க இருப்பு கொள்ளும்..) 

அவ அப்போ தான் எஞ்சினியரிங் சேர்ந்து இருந்தா.. 

ஒரு தடவை எனக்கு அம்மை போட்டு இருந்தது..

நான் கிளம்பி இங்க வந்துட்டேன்.. முழுசா ஒரு 

மாசம் லீவ் போட்டேன்..ஆனாலும் என்னை வேலைக்கு

எடுத்தவங்க ரொம்ப நல்லவனுங்க..என்னை ஒண்ணுமே 

சொல்லலை.. அப்போ தான் அவளுக்கும் செமஸ்டர் 

லீவ்..போதாதா.. நல்லா டெவலப் ஆச்சு.. 

( என்னது..அம்மையா..? ) அட எங்களுக்குள்ள 

இருந்த பிணைப்பு..



ஒரு தடவை நான் பெங்களூர்க்கு ஒரு வெண்டார் 

விசிட் வந்துட்டு அப்படியே சென்னை வந்தேன்..

இன்பார்ம் பண்ணலை.. வீட்டுக்கு வந்து பார்த்தா 

எல்லாரும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு 

போயிட்டாங்களாம்..ரெண்டு நாளில் வந்துடுவோம்..

நீ கிளம்பி வர வேண்டாம்..அங்கேயே இருன்னு

சொன்னாங்க..எனக்கும் சென்னை ல வெண்டார்ஸ் 

இருந்ததால ஆபிஸ்ல சொல்லிட்டு இன்னும் ஒரு 

வாரம் extend பண்ணிட்டேன்.. ( வெண்டார் விசிட் 

பண்ணுறதே அதுக்கு தானே டா.. ) அந்த ரெண்டு 

நாளும் அவ வீட்டில தான் சாப்பாடு.. அடுத்த நாள் 

அவங்க வீட்டில யாரும் இல்ல.. இவ மட்டும் தான் 

இருந்தா.. டிபன் சாப்பிட வாடான்னு சொல்ல வந்தா.. 

இவ வருவான்னு தெரிஞ்சே தான் நான் ஏற்கனவே 

எழுதி வச்சி இருந்த கவிதையைக் கையில வச்சி 

படிச்சிக்கிட்டு இருந்தேன்.. டே..வாடா..சாப்பிடலாம் 

னு சொன்னவ அது என்னடா கையில பேப்பர்னு 

கேட்க.. நான் எழுதுன கவிதை ரேவதி னு சொன்னேன்..

ஓஹ...அப்படியா யார நினைத்து டா எழுதுனனு

கேட்டா..ஏன்..யாரைன்னு உனக்கு தெரியாதான்னு நான்

பிட்டைப்போட.. ( அதானே பார்த்தேன்..இன்னும் 

பையன் பார்முக்கு வரலையேன்னு..) சரி..சரி..அதை 

வச்சிட்டு வா..இட்லி ஆறிடப் போகுதுன்னு சொன்னா.. 

கொஞ்சம் கூட மதிக்கவே இல்ல.. செம காண்டு 

ஆயிடுச்சு.. ( சத்திய சோதனை.. ) சரி..என்ன பண்ணித்

தொலையுறது னு நீ போ..நான் பிரஷ் பண்ணிட்டு 

வர்றேன்னு சொன்னேன்..



கொஞ்ச நேரம் கழிச்சி போனேன்..எல்லாத்தையும் 

எடுத்து ரெடியா வச்சி இருந்தா..வந்து உட்காருடா..

எனக்கும் பசிக்குது..சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னா.. 

எனக்கு உடனே ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விட்டுக்குற 

மாதிரி ஒரு கனவு.. ( பக்கத்து வீட்டுல வாங்கித் திங்குற

நாயிக்கு நினைப்பை பாரு.. ) சரின்னு போயி உட்காந்தேன்..

கிராதகி..எனக்கு பரிமாறிட்டு,அவளும் ஒரு தட்டை 

எடுத்துட்டு போயி சேர்ல உட்காந்துக்கிட்டு டிவி 

பார்க்க ஆரம்பிச்சுட்டா… என்ன எழவு டா இது..

காலையிலேயே கண்ணாடியை பார்த்துட்டனா..

( ஒருவேளை இருக்குமோ..? ) எல்லாம் இப்படி 

மொக்கையா போகுதேன்னு நெனச்சுகிட்டே 

சாப்பிட்டேன்.. அப்போ அப்போ வந்து பரிமாறியதோட

சரி.. பேசக்கூட இல்லைங்க.. எனக்கா..வாங்கின பல்பு

ஏகத்துக்கும் எரியுது.. நான் ரெண்டு தடவை பேச ட்ரை

பண்ணேன்..ஒரு வார்த்தையில பதில் சொல்லி முடிச்சா.. 

போடின்னு எனக்கு கோபம்.. ( பொண்ணுங்க கிட்ட நீ 

கோபப்பட மாட்டியே ராசா.. )



கொஞ்ச நேரத்தில அவங்க அம்மா வந்துட்டாங்க..

அதுக்கு அப்புறம் மதியம் சாப்பிட போனா ஆளே

மாறிட்டா..அவங்க அம்மா பரிமாற்ற வந்தாங்க..நீ போம்மா..

நான் போடுறேன் னு சொல்லி பக்கத்தில உட்காந்துட்டா..

சாப்பிடுடா..சாப்பிடுடானு ஒரு பாச மழை வேற.. நான் 

அப்படியே ஷாக் ஆயிட்டேன்..என்னடி நடக்குது 

இங்க..காலையில கண்டுக்கவே இல்ல.. மதிய நேரத்தில

மானாவாரியா மயக்குறாளே னு  ..( இவளுங்க எப்பவுமே

இப்படித்தான் மச்சி.. ) வழக்கம் போலவே ஞே னு 

முழிச்சேன்..என்னோட குழப்பத்தை புரிஞ்சிகிட்ட அவ 

கையில கிள்ளிட்டு,கண்ணடிச்சா..எனக்கு புரை ஏறிடுச்சு..



சிரிக்க ஆரம்பிச்சுட்டா..அதுக்குள்ளே அவ அம்மா வந்து 

என்னடி ஆச்சு னு கேட்க.. இவனை பாரும்மா..ஏதோ 

தெரியாதவங்க வீட்டில சாப்பிடுற மாதிரி சங்கோஜத்தோட

சாப்பிடுறான்னு சொன்னா..உடனே அவங்க ஏன்ப்பா..நாங்க

என்ன வேத்து மனுஷங்களானு மொக்கை போட

ஆரம்பிச்சாங்க.. எனக்கு சரியான காண்டு..அப்படி 

எல்லாம் ஒண்ணுமில்ல அத்தை..அவ சும்மா 

சொல்றா னு சமாளிக்க..நீயே பாரும்மா..அவன் தட்டுல

வச்சது எல்லாம் வச்ச படியே இருக்குனு போட்டு 

கொடுக்க..நீ பக்கத்திலேயே இருடி அவன் திருப்தியா 

சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும்னு சொல்லிட்டு 

அவங்க கிட்சன் குள்ள போயிட்டாங்க.. 

உடனே அவ 
ஏன்டா..இப்படி முழிக்கிற..
என்ன விளையாடுறியா..?காலையில ஏனோ தானோ னு 

சாப்பாடு போட்ட..இப்போ என்னடான்னா இப்படி வந்து 

இளிக்கிற..என்ன நெனச்சுகிட்டு இருக்க நீ..?
அதுவா..அதை அப்புறம் சொல்றேன்..இப்போ நல்லா 

சாப்பிடுன்னு தலையிலேயே கொட்டினா.. நானும் 

சாப்பிட்டு குழப்பத்தோடையே எழுந்துட்டேன்..



அப்புறம் சாயங்கலாம் ஒரு 6 மணிக்கு மொட்டை மாடி

வந்தா..நான் அங்க இருந்து பாத்திமாவை பார்த்துகிட்டு

இருந்தேன்..( அவ யாருன்னு தெரியாதவங்க பேருக்கு 

மேல் க்ளிக் பண்ணுங்க.. ) என்னதான் பாத்திமா 

அப்படின்னு தெரிஞ்சாலும் அழகா இருந்தா சார்..

அதான்.. ( நீ பார்க்கலைனா தான் அது அதிசயம்..

நீ சொல்லு.. ) மேல வந்த அவ..



என்னடா தூங்கி எழுந்துட்டியா..
ஆமா..நீ இன்னைக்கு பண்ணிய வேலைக்கு 

தூக்கம் வருமா என்ன..
அதுக்கில்ல டா காலையில நீயும்,நானும் 

தனியா இருந்தோம்..நான் உன்கிட்ட ஏதாவது 

சிரிச்சி பேசி நீ அதை அட்வாண்டேஜா எடுத்துகிட்டனா..?

அதான் அப்படி பண்ணேன்.. 

( பொண்ணு செம உஷாரு போல.. )
அட்வாண்டேஜா..அப்படினா.. 
ஆமாண்டா..உனக்கு ஒண்ணுமே தெரியாது..

நீ பாப்பா பாரு..
எனக்கு புரியலை..ஒருவேளை உன்கிட்ட தப்பா 

நடந்துக்குவேனோ நெனச்சியோ..பசியில இருக்கும்போது

அப்படி எல்லாம் தோணாது டி..அதுவும் இல்லாம நான்

ஏன் உன்கிட்ட தப்பா நடக்கணும்..நமக்குள்ள 

என்ன இருக்கு.. ( அடிச்சான் பாரு சிக்சர்.. )



உடனே அவ கண் லேசா கலங்கிடுச்சு..



ஆமாண்டா..நமக்குள்ளதான் ஒண்ணுமே இல்லைல..

நான் தான் தேவை இல்லாம பயந்துட்டேன்..அப்புறம் 

எத்தனை நாள் லீவ்ல டா வந்து இருக்கனு சட்டுன்னு 

பேச்சை மாத்தி சரளமா பேச ஆரம்பிச்சுட்டா.. 

( இப்போ வாங்கின இந்த பல்ப் இன்னும் 

பிரகாசமா எரியுது டா.. )



ஒரு ரெண்டு நாள் கழிச்சு,திடீருன்னு ஓடி வந்தா..

டே..இங்க பாருடா..அண்ணன் ( கசின் ) மொபைல் வாங்கி

கொடுத்திருக்காருன்னு காட்டினா..நான் வாங்கி அதுல 

இருக்குற அப்ப்ளிகேஷன் லாம் எப்படி யூஸ் 

பண்ணுறதுன்னு சொல்லிக்கொடுத்துட்டு..ரேவதி 

இதுல இருந்து என் நம்பருக்கு ஒரு கால் பண்ணி உன் 

நம்பரை சேவ் பண்ணிக்குறேன் னு சொன்னேன்.. 

இல்லைடா அதெல்லாம் வேணாம்..நாம போன் ல 

எல்லாம் பேசிக்க வேண்டாம் னு சொன்னவுடன் எனக்கு 

ஒரு மாதிரி ஆகி போச்சு..சரின்னு அவகிட்டயே

கொடுத்துட்டேன்.. ( ஹா..ஹா..ஹா..கேவலப்பட்டான் 

கணேஷ்.. ) அப்புறம் அவ அண்ணன் கிட்டே நம்பர் 

வாங்கி அவளுக்கு மெசேஜ் பண்னுனேன்..யார்னு 

கேட்டா நான் தான் னு சொன்னேன்..ஆனா பேசிக்கலை..

வெறும் மெசேஜ் மட்டும் தான்..நானோ ஒரே பீலிங்க்ஸா 

மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருந்தேன்..ஆனா ஒரு ரிப்ளை 

கூட வராது..சுத்தமா மதிக்கவே இல்ல..இருந்தாலும் 

நான் சளைக்காம அனுப்பிக்கிட்டு இருந்தேன்..

ஔரங்காபாத் போயும்..(முயற்சியில் மனம் 

தளராத விக்ரமாதித்தன்..)



அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி அது தலைவரோட சிவாஜி 

படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம்.. நான் ஊருக்கு வந்து

இருந்தேன்.. அப்போ ரோமிங் ல இருந்தேன்..சாயங்கால 

நேரம் ஒரு போன் வந்துச்சு..யார்னு கேட்டேன்.. நீங்க 

எனக்கு ரொம்ப நாளா மெசேஜ் பண்றீங்க..யாருங்க 

நீங்கன்னு கேட்டாங்க.. சாரிங்க..இந்த நம்பருக்கு 

நான் இதுவரைக்கும் மெசேஜ் அனுப்பவே இல்ல..

ராங் நம்பர்னு நினைக்கிறேன்னு சொல்லிட்டு

வச்சிட்டேன்..மறுபடியும் போன்..ஏன்டா..பேசிக்கிட்டே

இருக்கும்போது கட் பண்ணுறனு கேட்கவும் நான் 

சூடாயிட்டேன்.. அட அறிவுகெட்டவனே..போன் ல 

எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா..நான் ராங் 

நம்பர்னு சொல்றேன்..வாடா போடா னு பேசுறியே னு 

நான் எகிற..அவன் எகிற..திட்டிட்டு வச்சிட்டேன்.. 

மறுபடியும் போன் வந்துச்சு..அட்டென்ட் பண்ணிட்டு 

டிவி பக்கத்தில வச்சிட்டேன்..4,5 தடவை அப்படி 

பண்ணவும் வெறுத்துட்டான்.. கொஞ்ச நேரத்தில 

இன்னொரு நம்பர் ல இருந்து போன் கால்.. 
 
நீ ரேவதி னு ஒரு பொண்ணுக்கு மெசேஜ் அனுப்புறியே..

நீ யாரு..?
 
நான் ஏழெட்டு ரேவதிக்கு அனுப்புறேன்..அதெல்லாம் 

உனக்கு எதுக்கு..நீ யாருய்யா…?
 
நான் நீலாங்கரை போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து

பேசுறேன்..உன் அட்ரஸ் கண்டுபிடிச்சி வந்து அடிச்சி 

இழுத்துட்டு போவேன்..ஒழுங்கா பேசுடா..
 
அப்படியா ஆபிசர்..சந்தோசம்..ஏன் டா இப்படி 

சாயங்கால நேரத்தில மொக்கை போடுறீங்க..

போயி ஏதாவது புதுசா யோசிங்கடா டே னு 

சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்..
 
இவ காலேஜ் ல அவங்க பிரெண்ட்சை வச்சி 

கலாய்க்கிறானு   நெனச்சேன்.. அடுத்த போன் 

அவ நம்பர்ல இருந்தே வந்தது..
 
ஹலோ..நீங்க யாருங்க..?
 
ஹே..ரேவதி..நான் தான் கணேஷ்..
 
எந்த கணேஷ்..?
 
அடிப்பாவி..உங்க வீட்டுல இருக்க கணேஷ்..

அவுரங்காபாத்ல வேலை செய்யுற கணேஷ்..இது

உன் நம்பரா..நான் ரமேஷ் நம்பர் னு ல நெனச்சேன்..
 
ஐயையோ..நீயா..சரிடா போனை வை..
 
அவ்ளோ தான்..பேசிட்டு வச்சிட்டா..
 
மறுபடியும் அந்த ரெண்டாவது போன் வந்த நம்பர்ல 

இருந்து கால்..
 
ஏன்டா..டே..உன் பேரு கோபிநாத் தானே..கோயம்பேடு 

சின்மயா நகர்ல தானே இருக்கே.. இன்பார்ம் பண்ணிட்டேன்

இன்னும் 5 நிமிஷத்தில வந்து அள்ளிட்டு போறோம்

இருடான்னு சொல்ல..



எனக்கோ செம டர் ஆயிடுச்சு..ஏன்னா என்னோட சிம் 

கார்ட் என் பிரெண்டோட அண்ணன் ப்ரூப் கொடுத்து 

தான் வாங்கி இருந்தேன்..அவங்க வீட்டு அட்ரசை 

கரெக்டா சொல்றாங்கனா அப்போ இது போலீஸ் 

தானா..அவ்வ்வ்வ்…



சார்..சாரி சார்..அவ என்னோட பிரெண்டு தான்..என் 

நம்பர் மாத்தினது அவளுக்கு தெரியும்னு நெனச்சேன் 

சார்..ஐ யாம் சாரி சார்..னு தத்தக்கா  பித்தக்கானு 

உளறி கொட்டினேன்..



என்னடா பம்முற னு கேட்டவரு , அதுக்குள்ளே 

இன்னொரு கால் வரவும் கட் பண்ணிட்டாரு..



அதுக்குள்ளே அவ அண்ணன் கிட்ட இவ சொல்லி 

இருப்பா போல..அந்தாளு ஸ்டேஷன்ல தான் இருந்து 

இருக்கான்..அந்த 5 நிமிஷமும் நான் டன் டானா டர் 

னா ஆகி இருந்தேன்..
 
கொஞ்ச நேரத்தில திருப்பி கூப்பிட்டவரு..
 
ஏன் பா..தம்பி..பிரெண்ட்ஸ் குள்ள நம்பர் 

மாத்திட்டீங்கன்னா சொல்ல மாட்டீங்களா.. நீ பேசுன 

பேச்சுக்கு உன்னை தூக்க உன் தெரு முனையில 

தான் நிக்குறாங்க னு சொன்னதும்..ஐயையோ சார்..

இந்த சிம் கார்டு என் பிரெண்டோட அண்ணா பேரு ல 

இருக்கு சார்..அவர் தான் கோபிநாத்..அப்படி எல்லாம் 

எதுவும் பண்ணிடாதீங்கனு சொல்லவும்..
 
என்ன பசங்கப்பா நீங்க..கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ..

இப்படி எல்லாம் இனிமே பண்ணாத என்னனு சொல்ல..
 
நான் உடனே சரி சார்..சாரி சார் னு சொல்லி வச்சேன்.. 

எல்லாம் சரி..அது என்ன காலை அட்டென்ட் பண்ணி டிவி

பக்கத்தில வைக்குற..இது என்னயா புது விதமான

கொடுமையா இருக்கு னு சொல்லி சிரிக்க..

நான் பே, பே னு சிரிச்சேன்.. 

( அட..ச்ச..ஜஸ்ட் எஸ்கேப்பா.. )



என்னடா நடந்துச்சுன்னு ரெண்டு நாள் கழிச்சி விசாரிச்சா , 

அது ஏதோ டூயல் சிம் மாம்..ஒரு நம்பருக்கு 

அனுப்பினது,பேசினது எல்லாம் இன்னொரு நம்பருக்கும்

தெரியுமாம்.. அந்த பிக்காலி கசின்,இவ கிட்ட யாரும் 

தப்பா நடக்கக்கூடாதுன்னு இப்படி எல்லாம் பண்ணி

இருக்கான்..இந்த எழவு எல்லாம் எனக்கு எப்படி

தெரியும்..மாட்டிக்கிட்டேன்.. சைபர் கிரைம் ல 

மாட்டின அன்னைக்கே அவ கிட்ட 

சொன்னேன்..அடியே..இதெல்லாம் வீட்டில 

சொல்லிக்கிட்டு இருக்காதா..சங்கடமா போயிடும்னு..

அவளும் சரி சரின்னு சொல்லிட்டு..அவங்க வீட்டுல 

வந்து போட்டு விட்டுட்டா போல.. ( ஏன்டா..இவ கிட்ட 

மட்டும் இவ்வளவு பல்ப் வாங்கி இருக்க.. ? ) அதுக்கு 

அப்புறம் என்னை அவ அம்மா,அக்கா,அண்ணன் னு 

எல்லாரும் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க 

அப்பா கிட்ட சொல்லலை..எங்க வீட்டுலையும் 

சொல்லலை.. அவ அப்பன் மேல அவளுக்கு 

கொஞ்சம் பயம் அதிகம்.


இவ கிட்ட வாங்கிய பல்பு ஏராளம்..மூணு வருஷம் 

கழிச்சி மறுபடியும் நான் மானங்கெட்டு போனதை 

சீக்கிரமே பதிவிடுறேன்..