Thursday, October 20, 2011

மாத்தி யோசி ..44

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






வேலாயுதம் னா அரக்கர்களை மட்டும் இல்லைடா,

ஆடியன்ஸையும் அழிக்கும்..

#பன்ச் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.

ஜெராக்சும்,அணிலும் ஏமாத்தாதுன்னு நினைக்கிறேன்.



உண்மையா விரும்புன பையன் முகத்தில தாடி..

பொய்யா நடிச்ச பொண்ணு கழுத்துல வேற ஒருத்தன் 

கட்டிய தாலி..# T .R எபக்ட்..




வருத்தப்படுவதும்,விதண்டாவாதம் பண்ணுவதும் 

அப்போதைக்கு சரின்னு தோணும்..ஆனா அதனால 

எந்த பயனும் இல்ல..



நான் சீரியஸா இருந்து எதையும் சாதிக்கலை..

யாரையும் அழவைக்காம சிரிக்க வச்சி சிலரையாவது

சந்தோஷப்படுத்தலாமேனு தான் இப்படி திரியுறேன்..



காதலி கிடைக்காம கடுப்பு ஆகுறதை விட..

எவளையாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு 

காண்டு ஆகலாம்னு பார்த்தா எவளும் வர மாட்றாளே..

# எவளாவது வாங்கடி ப்ளீஸ்..





எனக்கு சம்ஸ்கிருதத்தில தெரிஞ்ச ஒரே மந்திரம் 

காயத்ரி மந்திரம் மட்டும் தாங்க..





பெண்களுடனான ஒவ்வொரு சந்திப்பும் ஆண்களின் 

திருப்புமுனை தான்..

பல பேரு பேலன்ஸ் இல்லாம சறுக்கிடுறாங்க..


நாம லவ் பண்ணா தியேட்டர்காரன்,ரெஸ்டாரன்ட்காரன்,

பெட்ரோல் ங்க் வச்சிருக்குறவன்,நகை,ஜவுளி வியாபாரிகள் 

லைப் தான் நல்லா இருக்கு..நம்மோடது..ம்ஹூம்..



சிரிப்பு சந்தோஷங்களை மட்டுமே குறிக்கிறது இல்ல..

சில நேரங்களில் நம்மோட மன தைரியத்தையும் 

காட்டக்கூடியதா இருக்கு..# ஹா.ஹா..போடா..



என்னோட இருப்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது..

ஆனா நான் இல்லைனா ஏதோ  இழந்த உணர்வு இருக்கணும்..

இது தான் நான் ஆசைப்படுறது..



நிலை இல்லாத இந்த வாழ்க்கையில  நிலையான 

காதலை எதிர்ப்பார்த்தா அது தப்பு தான்..

1 comment: