Thursday, March 31, 2011

இது கவிதையா..?

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நீ சாலையில் வீசி சென்ற பயணச்சீட்டும் 

வருத்தப்பட்டதடி… 

உன்னுடன் பயணம் செய்யும்

நேரம் முடிந்தது என்று…






சாப்பிடும் போது புரை ஏறினால் இதயத்தை

தட்டுகிறேன்… நிச்சயம் நினைத்தது நீ யாகத்தான்

இருப்பாய் என்று…





என் இதயம் இரும்பானாலும் 

உன் கண்கள் காந்தமாகிறதே…
 
நீ விழிகளால் பேசி என் மொழியை

மவுனமாக்குகிறாயே…








உன்னை மறக்க வேண்டுமென துடிக்கிறேன்…

என்று எனக்கு நானே நடிக்கிறேன்… 







உன் பார்வை பட்டதாலோ என்னவோ
 
இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை..

அது கண்களா இல்லை க்ளோரோ பார்மா..


No comments: